ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்

பதிகங்கள்

Photo

உணர்வுடை யார்கட் குலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட் குறுதுய ரில்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம்
உணர்வுட யார்கள் உணர்ந்துகண் டாரே.

English Meaning:
Know the Finite Truth

They the Awareness have, see worlds all,
They the Awareness have, know sorrows none,
When they that Awareness have truly realized,
They indeed have the Truth Finite seen.
Tamil Meaning:
குருவருளால் ஞானத்தை உணர்வாட்கு உலகத்தின் இயல்பும் தோன்றும். (உம்மையால், உலகத்தைச் செயற்படுத்தி நிற்கின்ற முதல்வனது இயல்பும் தோன்றும்) ஆகவே, உலகத்தைப் பற்றாது விடுத்து முதல்வனையே பற்றி நிற்பர் ஆகையால் அவர்கட்கு உலகத்தால் ழிளக்கப்படும் துன்பம் இல்லையாகும். (முதல்வனால் தரப்படும் இன்பமே விளயும்.) குருவருளால் ஞானம் பெற்றவர்கள் அதனை முதற்கண் கேள்வியளவாகவே உணர்ந்தாராயினும், பின்பு சிந்தித்துத் தெளிந்து கொள்வார்கள்.
Special Remark:
எனவே, `கேட்டல் அடிப்படை` என்பதாம். உயிர்கள் ஞானத்தைப் பெறும் முறைமையை இவ்வதிகாரத்து முன் மந்திரத்திற்கு முன்மந்திரங்காறும் விரித்தருளிச் செய்தமையால் மீட்டும் அதனை எடுத்துக் கூறாராயினார்.
இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணி.
இதனால், ஞானம் படிநிலையான் முற்றுமாறும், அதன் பயனும் கூறப்பட்டன.