ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்

பதிகங்கள்

Photo

கூடும் உடல்பொருள் ஆவிக் குறிக்கொண்டு
நாடி அடிவைத் தருள்ஞான சத்தியால்
பாடல் உடலினிற் பற்றற நீக்கியே
கூடியே தான்அவ னாம்குறிக் கொண்டே.

English Meaning:
Siva takes Jiva into Himself

Intent on redemption of my body, wealth and life
He sought me and planted His Feet on my head
And with the Grace of Sakti divine He exorcised
My love for the body fleshy;
And He and I as one He made
Intermingling in union non-separate.
Tamil Meaning:
சிவன் தன்னை அடையும் செவ்வி வாய்ந்த உயிரையும், அதனது உடல் பொருள்களையும் தன்னுடையனவாக ஏற்றுக்கொள்ளுதலையே குறிக்கோளாகக் கொண்டு, அவ்வுயிர் வாழும் இடத்தை நாடி அடைந்து, தனது திருவடிகளை அதனது திரு வடிகளை அதனது முடிமேற் சூட்டி, அதன்பின் வழங்கிய ஞானத்தின் துணையால் அவ்வுயிர் இழிவுடைய உடலில் முன்பு கொண்டிருந்த பற்றை அறவே விடுத்து, அச்சிவன் ஒருவனையே குறிக்களோகக் கொண்டு அவனை அடைந்து, தான் அவனேயாகிவிடும்.
Special Remark:
``ஆவி`` என்பதை, ``கூடும்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``அருள் ஞானம்`` இறந்தகால வினைத்தொகை. `தனது ஞானம்` என்பது உணர்த்தற்கு. `ஞானம்` என்று ஒழியாது, ``ஞான சத்தி`` என்றார். பாடு - மேன்மை. அதனை, `பாடு பெறுதியோ நெஞ்ே\\\\u2970?`` l என்பத னானும் உணர்க. மேன்மையன்மை கீழ்மையை உணர்த்திற்று. `கூடிய` என்பதும், `குளிக்கொண்டு` என்பது பாடம் அல்ல.
இதனால், `ஞானம் பெற்றவரே வீடுபெறுவர்` என்பது கூறப்பட்டது.