ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர்
    செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
    தந்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச்
    சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே. 
  • 10. மறையோ ரவரே மறையவ ரானால்
    மறையோர்தம் வேதாந்த வாய்மையில் தூய்மை
    குறையோர்தல் மற்றுள்ள கோலா கலமென்
    றறிவார் மறைதெரிந் தந்தண ராமே. 
  • 11. அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
    சிந்தைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவி
    நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
    அந்தியுஞ் சந்தியும் ஆகுதி பண்ணுமே. 
  • 12. வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
    நாதாந்த போதம் நணுகிய பேர்க்கது
    போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்
    நாதாந்த முத்தியுஞ் சித்தியும் நண்ணுமே.
  • 13. தானே விடும்பற் றிரண்டுந் தரித்திட
    நானே விடப்படு மேதொன்றை நாடாது
    * * * * * * 
  • 14. பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
    ஓமேவும் ஓரா குதிஅவி உண்ணவே
    * * * * * * 
  • 2. வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்
    போதாந்த மான பிரணவத் துள்புக்கு
    நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
    ஈதாந்தம் என்னார்கண் டின்புறு வோர்களே.
  • 3. காயத் திரியே கருதுசா வித்திரி
    ஆய்தற் குவப்பர் மந்திரமாங் குன்னி
    நேயத்தே ரேறி நினைவுற்று நேயத்தாய்
    மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே. 
  • 4. பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
    குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
    திருநெறி யான திருக்கை யிருத்திச்
    சொருபம தானோர் துகளில்பார்ப் பாரே. 
  • 5. சத்திய முந்தவம் தான்அவன் ஆதலும்
    எய்த்தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
    ஒத்த உயிர்உடன் உண்மை யுணர்வுற்றுப்
    பெத்தம் அறுத்தலு மாகும் பிரமமே. 
  • 6. வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
    வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
    வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
    வேதாந்தங் கேட்டவர் வேட்கைவிட் டாரே. 
  • 7. நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ
    நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்
    நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
    நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.
  • 8. சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
    ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்
    பத்தியும் இன்றிப் பரன்உண்மை யுமின்றிப்
    பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே. 
  • 9. திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்
    குருநெறி யாலே குருபதஞ் சேர்ந்து
    கரும நியமாதி கைவிட்டுக் காணுந்
    துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே.