
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்
பதிகங்கள்

அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியுஞ் சந்தியும் ஆகுதி பண்ணுமே.
English Meaning:
The holy Brahmins who the pure life embrace,And ponder well no truths that mark the Vedas` end,
Their land wanes not, their king`s earthly empire ever grows,
If morn and eve the sacrificial fire they tend.
Tamil Meaning:
உயிர்களிடத்து அழகிய அருளை மேற்கொண்ட வரும் வேதாந்த மெய்ப்பொருளையே சிந்தை செய்பவரும் ஆகிய அந்தணர் வாழ்கின்ற நல்ல நாடு எவ்வாற்றானும் கேடுறுதல் இல்லை. அதனை ஆள்கின்ற அரசனும் நலம்பெற்று வாழ்வான். அந்தியிலும், ஏனைச் சந்தியா காலங்களிலும் வேள்விகள் குறைவின்றி நடைபெறும்.Special Remark:
`அந்தணர்` என்னும் சொற்பொருள் `அம் தணர்` எனவும், `அந்த அணர்` எனவும் பிரித்து இருவகையாகக் கூறப் படுதலை முறையே பரிமேலழகர் உரையிலும் (திருக்குறள் 30) நச்சினார்க் கினியர் உரையிலும் காண்க (திருமுருகாற்றுப்படை - 96. மதுரைக் காஞ்சி - 474, கலி கடவுள் வாழ்த்து). இவ்விருபொருளும் இங்குக் கூறப்பட்டவாறு அறிக. `நரபதி` என்பது வடசொல்லாதலின்; அஃறிணை முடிபு ஏற்றது. அந்தியும் சந்தியேயாயினும் சந்தியாதற்குச் சிறப்புப் பற்றி வேறெடுத்து ஓதினார். ``பண்ணும்`` என்பது `பண்ணப்படும்` என்னும் பொருட் டாய் நின்றது; ``எண்ணும் அஞ்செழுத்தே`` (சிவஞானபோதம் சூ. 9) என்பதிற்போல. ``நாடாயினும், காடாயினும், அவலாயினும், மிசையாயினும் எவ்வழி மக்கள் நல்லரோ அவ்வழியே நிலனும் நல்லதாம்`` (புறம் - 187) ஆகலின், நல்ல அந்தணர் வாழும் நாடு நலமிகப் படைத்தலை அறிந்து கொள்க. திருவள்ளுவரும் இக்கருத்தே பற்றி, `தள்ளாவிளையுள் முதலிய வற்றோடு, தக்காரை உடையதே நல்ல நாடு` (குறள் -731) என்றார்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage