ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்

பதிகங்கள்

Photo

காயத் திரியே கருதுசா வித்திரி
ஆய்தற் குவப்பர் மந்திரமாங் குன்னி
நேயத்தே ரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே. 

English Meaning:
Minds centered in Gayatri holy and Savitri mysterious,
They chant the noble hymns, the heart of Truth to seek;
Mounted on Love`s Chariot, lost in Love`s sweet ecstasy,
They drown not in Maya — the holy Brahmins meek.
Tamil Meaning:
அன்பாகிய ஊர்தியின்மேல் சென்று முதற் பொருளை அடைந்து அதுவேயாய் அழுந்திநின்று உலகத்தில் பற்றற்று நிற்பவரே, அந்தணர்க்கும் உண்மை காயத்திரி, சாவித்திரி முதலாகச் சொல்லப்படுகின்ற ஞான சத்திகளின் வேறுபாட்டியல் புகளை எல்லாம் அவற்றிற்குரிய மந்திரங்களை நெஞ்சிற் பதித்து ஓர்தற்கு விரும்புவர்.
Special Remark:
எனவே, `பிறரெல்லாம் அவ்விருப்பமின்றி, வாளா அம்மந்திரங்களைச் சிறிதுபொழுது ஓதுதலோடு ஒழிவர்` என்றது ஆயிற்று. ஆகவே, `இந்நிலையுடையோரே சிறப்புடை அந்தணர்` என்பது பெறப்பட்டது. அநுபவத்திற்கு அறிவன்றி அன்பே நேர் வாயிலாகலின், ``நேயத் தேர் ஏறி`` என்றார். ``நேயத்தாய்`` என்றதில், நேயம், `ஞேயம்` என்னும் வடசொல்லின் திரிபு. ஞேயம் - அறியப் படும் பொருள்.