ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம்
    வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன
    பட்டன மீன்கள் பரதன் வலைகொணர்ந்து
    இட்டனன் யாம்இனி ஏதம் இலோமே.
  • 10. சென்றன நாழிகை நாள்கள் சிலபல
    நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்தொத்து
    வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்
    குன்று விழஅதில் தாங்கலும் ஆமே.
  • 11. போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப்
    போற்றிசெய் மீட்டுப் புலன்ஐந்தும் புத்தியால்
    நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை
    ஊற்றுகை உள்ளத் தொருங்கலு மாமே.
  • 12. தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தி னுள்ளே
    அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்
    சிரிக்கின்ற வாறு சிலபல பேசில்
    வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே.
  • 13. கைவிட லாவதொன் றில்லை கருத்தினுள்
    எய்தி யவனை இசையினால் ஏத்துமின்
    ஐவ ருடைய அவாவினில் தோன்றிய
    பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே.
  • 2. கிடக்கும் உடலில் கிளர்இந் திரியம்
    அடக்க லுறுமவன் றானே அமரன்
    விடக்கிரண் டின்புற மேவுறு சிந்தை
    நடக்கில் நடக்கும் நடக்கு மளவே.
  • 3. அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்
    அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
    அஞ்சும் அடக்கில் அசேதன மாம்என்றிட்டு
    அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே.
  • 4. முழக்கி எழுவன மும்மத வேழம்
    அடக்க அறிவென்னும் தோட்டியை வைத்தேன்
    பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
    கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே.
  • 5. ஐந்தில் ஒடுங்கில் அகலிட மாவது
    ஐந்தில் ஒடுங்கில் அருந்தவ மாவது
    ஐந்தில் ஒடுங்கில் அரன்பத மாவது
    ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே.
  • 6. பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென்
    விரித்த பொருட்கெல்லாம் வித்தாவ துள்ளம்
    பெருக்கிற் பெருக்கும் சுருக்கிற் சுருக்கும்
    அருத்தமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.
  • 7. இளைக்கின்ற வாறறிந் தின்னுயிர் வைத்த
    கிளைக்கொன்றும் ஈசனைக் கேடில் புகழோன்
    அளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கின்
    துளைக்கொண்ட தவ்வழி தூங்கும் படைத்தே.
  • 8. பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி
    சார்ந்திடு ஞானத் தறியினிற் பூட்டிட்டு
    வாய்ந்துகொள் ஆனந்த மென்னும் அருள்செய்யில்
    வேய்ந்துகொள் மேலை விதியது தானே.
  • 9. நடக்கின்ற நந்தியை நாடொறு முன்னிப்
    படர்க்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக்
    குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்
    வடக்கொடு தெற்கும் மனக்கோயி லாமே.