ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. திகைக்குரி யான்ஒரு தேவனை நாடும்
    வகைக்குரி யான்ஒரு வாதி யிருப்பின்
    பகைக்குரி யாரில்லை பார்மழை பெய்யும்
    அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே.
  • 10. தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி
    மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப்
    புலைமிசை நீங்கிய பொன்னுல காளும்
    பலமிசை செய்யும் படர்சடை யோனே.
  • 11. அறியாப் பருவத் தரனடி யாரைக்
    குறியால் அறிந்தின்பங் கொண்ட தடிமை
    குறியார் சடைமுடி கூட்டி நடப்பார்
    மறியார் புனல்மூழ்க மாதவ மாமே.
  • 12. அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்
    சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லர்
    அவன்பால் அணுகியே நாடும் அடியார்
    இவன்பாற் பெருமை இலயம தாமே.
  • 13. முன்னிருந் தார்முழு தெண்கணத் தேவர்கள்
    எண்ணிறந் தன்பால் வருவர் இருநிலத்து
    எண்ணிரு நாலு திசைஅந் தரம்ஒக்கப்
    பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே.
  • 14. சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம்
    அவயோக மின்றி அறிவோருண் டாகும்
    நவயோகம் கைகூடும் நல்லியல் காணும்
    பவயோக மின்றிப் பரகதி யாமே.
  • 15. மேல்உண ரான்மிகு ஞாலம் படைத்தவன்
    மேல்உண ரான்மிகு ஞாலம் கடந்தவன்
    மேல்உண ரார்மிகு ஞாலத் தமரர்கள்
    மேல்உணர் வார்சிவன் மெய்யடி யார்களே.
  • 2. கொண்ட குழியும் குலவரை யுச்சியும்
    அண்டரும் அண்டத் தமரரும் ஆதியும்
    எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்திலும்
    உண்டெனில் யாம்இனி உய்ந்தொழிந் தோமே.
  • 3. அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
    கொண்ட சராசர முற்றும் குணங்களும்
    பண்டை மறையும் படைப்பளிப் பாதியும்
    கண்ட சிவனுமென் கண்ணன்றி யில்லையே.
  • 4. பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்
    உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்
    கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்
    அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே.
  • 5. இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
    மயங்கா வழிச்செல்வர் வானுல காள்வர்
    புயங்களும் எண்டிசை போதுபா தாளம்
    மயங்காப் பகிரண்டம் மாமுடி தானே.
  • 6. அகம்படி கின்றநம் ஐயனை ஓரும்
    அகம்படி கண்டவர் அல்லலிற் சேரார்
    அகம்படி யுட்புக் கறிகின்ற நெஞ்சம்
    அகம்படி கண்டாம் அழிக்கலும் எட்டே.
  • 7. கழிவும் முதலுமெங் காதற் றுணையும்
    அழிவும தாய்நின்ற ஆதிப் பிரானைப்
    பழியும் புகழும் படுபொருள் முற்றும்
    ஒழியுமென் ஆவி உழவுகொண் டானே.
  • 8. என்தாயொ டென்னப்பன் ஏழேழ் பிறவியும்
    அன்றே சிவனுக் கெழுதிய ஆவணம்
    ஒன்றா யுலகம் படைத்தான் எழுதினான்
    நின்றான் முகில்வண்ணன் நேரெழுத் தாயே.
  • 9. துணிந்தார் அகம்படி துன்னி உறையும்
    பணிந்தார் அகம்படி பாற்பட் டொழுகும்
    அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்
    கணிந்தார் ஒருவர்க்குக் கைவிட லாமே.