ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை

பதிகங்கள்

Photo

மேல்உண ரான்மிகு ஞாலம் படைத்தவன்
மேல்உண ரான்மிகு ஞாலம் கடந்தவன்
மேல்உண ரார்மிகு ஞாலத் தமரர்கள்
மேல்உணர் வார்சிவன் மெய்யடி யார்களே.

English Meaning:
Greatness of Siva Yoga Jnanis

They who the Higher Knowledge attained,
Can even create this world;
They who the Higher Knowledge attained,
Can transcend worlds several;
They who the Divine Light perceived
Are verily immortals here below;
They indeed are Siva`s devotees true.
Tamil Meaning:
பிரமன், விட்டுணு, பிறதேவர் ஆகியோ ரெல்லாம் தாம் தாம் செய்யும் அதிகாரத்தைத் தமது ஆற்றலால் அமைந் தனவாகவே கருதி மயங்குவாரல்லது, `இவை பரம்பொருளாகிய சிவனது ஆணையின்வழி நமக்கு அமைந்தன, என்று உணர மாட்டார்கள் (அதனால் அவர்கள் மெய்யடியாராதல் இல்லை) அந் நிலையில், `நமக்குக் கிடைத்த நலங்கள் யாவும் பரம்பொருளாகிய சிவனது அருளால் கிடைத்தன` எனச் சிவனுக்கு மெய்யடியா ராயினாரே உணர்வார்கள்.
Special Remark:
முதல் மூன்று அடிகளில் `உணர்வான், உணர்வார்` என்பன பாடம் ஆகாமை அறிந்துகொள்க. மேல் - மேலான பொருள், என்றது அதன் அருளை. மிகு ஞாலம் - வானுலகம். பிரமனாதியோர் சில வேளைகளில். `எமக்கு உள்ள நலம் சிவனருளால் வந்தது எனக் கூறினாராயினும் அது முகமனுரையேயன்றி, மெய்யுரையன்று` என்க.
இதனால், அயன் மால் முதலியோரினும் அடியார் உயர்ந்தோராதல் கூறப்பட்டது.