ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை

பதிகங்கள்

Photo

கொண்ட குழியும் குலவரை யுச்சியும்
அண்டரும் அண்டத் தமரரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்திலும்
உண்டெனில் யாம்இனி உய்ந்தொழிந் தோமே.

English Meaning:
I am Redeemed when I reach the Goal of Union in Siva

The goal I sought (of union in Siva)
The peaks of mountain high in there, (Sanasrara)
The denizens of heavens,
The immortals celestial,
The hordes of humans from quarters eight
And the Primal One, too,
—If toward me they come,
And in my hands I hold them,
Redeemed am I, forever and ever.
Tamil Meaning:
நிலத்தைத் தன்னகத்துக் கொண்ட கடல்களும், நிலத்தை நிலைபெறுத்துகின்ற எட்டுக் குலமலைகளின் சிகரங்களும், வானுலகமும், வானுலகத்திலுள்ள தேவர்களும், அத்தேவர்களுக்கு முதல்வனாகிய இந்திரனும் மற்றும் திசைக்காவலரும் ஆகிய அனைத்தும், அனைவரும் வந்து எனது கையிலும் அடங்கியுள்ளன, உள்ளனர் என்றால், இனி நாங்கள் எந்த இடர்ப்பாட்டிலும் அகப்படாமல் அவற்றினின்றும் தப்பிவிட்டோமன்றோ!
Special Remark:
`கொண்ட குறி` என்பது பாடமன்று. கடலுக்கு `ஆழி` என்னும் பெயருண்மை பற்றி, ``குழி`` என்றார். `நாங்கள்` என்றது அடியார் அனைவரையும். ``என் கைத்தலத்திலும்`` என்ற உம்மை இழிவு சிறப்பு. `அடியவருள் கடைப்பட்ட என்கையிலும் உள்ளன என்றால் பிற அடியவர் கையில் இருத்தல் சொல்ல வேண்டுமோ` என்பதாம். அவை எம் வசத்தன அல்லது, யாம் அவற்றது வசத்தினேம் அல்லேம்` என்றபடி. `எல்லாப் பொருள்களும் சிவன் வசத்தின ஆதலின் அவை அவன் அடியார் வசத்தினவாம் என்றபடி.
தாமடங்க இந்தத் தலமடங்கும்; தாபதர்கள்
தாமுணரின் இந்தத் தலமுணரும் - தாமுனியின்
பூமடந்தை நில்லாள்; புகழ்மடந்தை போயகலும்
நாமடந்தை நில்லாள் நயந்து. -திருக்களிற்றுப்படியார், 68
எனவும்,
அகில காரணர் தாள்பணி வார்கள்தாம்
அகில லோகம் ஆளற் குரியர். -தி.12 திருக்கூட்டச்சிறப்பு, 3
எனவும் அருளிச் செய்தல் காண்க.
இதனால், `சிவனடியாரை உலகம் வாதியாமையே யன்றி அவர் வேண்டியவாறுமாம்` என்பது கூறப்பட்டது.