ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
    தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
    தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
    தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே.
  • 10. மாயனு மாகி மலரோன் இறையுமாய்க்
    காயநன் னாட்டுக் கருமுத லானவன்
    சேயன் அணியனாய்த் தித்திக்கும் தீங்கரும்
    பாய் அமு தாகிநின் றண்ணிக்கின் றானே.
  • 11. என்னை யறிகிலேன் இத்தனை காலமும்
    என்னை யறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
    என்னை யறிந்திட் டிருத்தலும் கைவிடா(து)
    என்னையிட் டென்னை உசாவுகின் றேனே.
  • 12. மாய விளக்கது நின்று மறைந்திடும்
    தூய விளக்கது நின்று சுடர்விடும்
    காய விளக்கது நின்று கனற்றிடும்
    சேய விளக்கினைத் தேடுகின் றேனே.
  • 13. தேடுகின் றேன்திசை யெட்டோ டிரண்டிலும்
    நாடுகின் றேன்நல மேயுடை யான்அடி
    பாடுகின் றேன்பர மேதுணை யாம்எனக்
    கூடுகின் றேன்குறை யாமனத் தாலே.
  • 14. முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்
    பின்னைப் பெருமலம் வந்தவா பேர்த்திட்டுத்
    தன்னைத் தெரிந்து தன் பண்டைத் தலைவன்தாள்
    மன்னிச் சிவமாக வாரா பிறவியே.
  • 2. அங்கே அடற்பெருந் தேவரெல் லாந்தொழச்
    சிங்கா தனத்தே சிவன்இருந் தான்என்று
    சங்கார் வளையும் சிலம்பும் சலேல்எனப்
    பொங்கார் குழலியும் போற்றிஎன் றாளே.
  • 3. அறிவு வடிவென் றறியாத என்னை
    அறிவு வடிவென் றருள்செய்தான் நந்தி
    அறிவு வடிவென் றருளால் அறிந்தேன்
    அறிவு வடிவென் றறிந்திருந் தேனே.
  • 4. அறிவுக் கழிவில்லை ஆக்கமும் இல்லை
    அறிவுக் கறிவல்ல(து) ஆதாரம் இல்லை
    அறிவே அறிவை அறிகின்ற(து) என்றிட்(டு)
    அறைகின் றனமரை ஈறுகள் தாமே.
  • 5. மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து
    முன்னிநின் றானை மொழிந்தேன் முதல்வனும்
    பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப்
    பின்னிநின் றேன் `நீ பெரியை` என் றானே.
  • 6. அறிவறி வாக அறிந்தன்பு செய்மின்
    அறிவறி வாக அறியும்அவ் வண்ணம்
    அறிவறி வாக அணிமாதி சித்தி
    அறிவறி வாக அறிந்தனன் நந்தியே.
  • 7. அறிவறி வென்றங் கரற்றும் உலகம்
    அறிவறி யாமையை யாரும் அறியார்
    அறிவறி யாமை கடந்தறி வானால்
    அறிவறி யாமை அழகிய வாறே.
  • 8. அறிவறி யாமையை நீவி யவனே
    பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போது
    அறிவாய வற்றினுள் தானாய் அறிவின்
    செறிவாகி நின்றவன் சீவனும் ஆமே.
  • 9. அறிவுடை யார்நெஞ் சகலிட மாவ(து)
    அறிவுடை யார்நெஞ் சருந்தவ மாவ(து)
    அறிவுடை யார்நெஞ்சொ டாதிப் பிரானும்
    அறிவுடை யார்நெஞ்சத் தாகிநின் றானே.