
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம்
பதிகங்கள்

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே.
English Meaning:
Importance of Self-KnowledgeWith knowledge of Self
No harm there be;
Without knowledge of Self
Himself His (Jiva) harm be;
When knowledge
That knows the Self dawns,
Yourself Siva become,
Worshipped high.
Tamil Meaning:
ஒருவன் பொருள் இயல்புகளை உள்ளவாறு அறியப் புகும்பொழுது தன்னுடைய இயல்பை முதற்கண் உள்ளவாறு அறிவானாயின், அதன்பின்பு அவனது அறிவு பொய்யறிவாகிக் கெடாது; தானும் எந்தக் கேட்டினையும் எய்தான். ஆகவே, மனிதன் முதலில் தன்னுடைய இயல்பை அறிய முயலாமல், பிற பொருள்களின் இயல்பை அறிய முற்படுவதால், அறிவுகெட்டு அலைகின்றான். அதனால், ஒருவன் முதலில் தனது இயல்பை உள்ளவாறு அறியும் அறிவைப் பெற்றுவிடுவானாயின், அவன் தன்னையே பிறர் வழிபடும் அளவிற்கு உயர்ந்து நிற்பான்.Special Remark:
இங்கு, அறிபவனையே ``தான்`` என்றார், `ஆன்மா` என்னும் வழக்குப் பற்றி `அகம்` என்னும் தமிழ்ச் சொல்லாலும் குறிப்பது உண்டு. முதற்கண் தன்னை அறிதல் அனுமானத்தானும், பின்னர் அனுபவத்தானும் என்க. `தானே` என்றது, `பிறர் கெடுக்க வேண்டாது` என்றபடி. அறிவை அறிதல் - அறிவைப் பெறுதல். வழிபடுதல் சிவமாய தன்மை பற்றியாதலின், `சிவமாகி இருப்பன்` என்றபடி.இதனால், `மெய்யறிவில் தன்னை அறிதல் முதற்படி` என்பது கூறப்பட்டது. ``தம்மை உணர்ந்து, தமை உடைய தன்னுணர்வார்`` எனவும், ``தம்மை உணரார் உணரார்`` எனவும் மெய்கண்ட தேவரும் அருளிச்செய்தார்.l
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage