ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம்

பதிகங்கள்

Photo

அறிவுக் கழிவில்லை ஆக்கமும் இல்லை
அறிவுக் கறிவல்ல(து) ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்ற(து) என்றிட்(டு)
அறைகின் றனமரை ஈறுகள் தாமே.

English Meaning:
Jnana Alone Knows Jnana

Jnana has no death, nor birth;
Jnana has ground none but jnana;
It is Jnana that knows Jnana
Thus they conclude, in the ultimate, Vedas all.
Seat of Jnana Within

Above the flower of the heart, (Visuddha Adhara)
Is a flower of petal sixteen,
There is Jnana Pure,
Sivananda (Siva-Bliss) it is;
When jnana of Self
In it merged
Jiva united in Siva
And as one remained.
Tamil Meaning:
தோற்றமும், கேடும் சடத்துக்கன்றிச் சித்துக்கில்லை. சித்துக்குப் பற்றுக்கோடு சித்தேயன்றிச் சடம் அன்று. அவ்வாறே சித்தை யறிவதும் சித்தன்றிச் சடம் அன்று. இவ்வாறு, `வேத முடிபுகள்` எனப்படுகின்ற உபநிடதங்கள் யாவும் கூறுகின்றன.
Special Remark:
இந்த முறைமையால், `பிறப்பதும், இறப்பதும் உயிரன்று; உடம்பே உயிருக்கு உடம்பு பற்றுக்கோடன்று, சிவமே பற்றுக்கோடு - இனிச் சிவத்தை அறிவதும் உயிரேயன்றி, உடம்பன்று` என்பவற்றை உணர்த்தி, `உதயமான அறிவைக் கொண்டு இவற்றை யெல்லாம் இவ்வாறு அறிதல் வேண்டு` என்பது உணர்த்தியவாறு. `இட்டு`, அசை நிலை.
இதனால், `மெய்யறிவாவது இது` என்பது கூறப்பட்டது. (இம் மந்திரத்தின் பின் பதிப்புக்களில் காணப்படுகின்ற, ``ஆயு மலரின்`` என்னும் மந்திரம் முன் தந்திரத்து முதல் அதிகாரத்து இறுதியில் சொல்லப்பட்டது.)