ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. சாக்கிர சாக்கிரந் தன்னில் திரோதாயி
    சாக்கிர சொப்பனந் தன்னிடை மாயேயம்
    சாக்கிரந் தன்னிற் சழுத்திதற் காமியம்
    சாக்கிரந் தன்னில் துரியத்து மாயையே.
  • 10. விளங்கிடும் முந்நூறு முப்ப தொருபான்
    தளங்கொள் இரட்டிய(து) ஆறு நடந்தால்
    வழங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து
    விளங்கிடும் அவ்வழித் தத்துவம் நின்றே.
  • 11. நாலொரு கோடியே நாற்பத் தெண்ணாயிரம்
    மேலும்ஓர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும்
    பால்அவை தொண்ணூற்றோ டாறுட்படும் அவை
    கோலிய ஐயைந்து ளாகும் குறிக்கிலே.
  • 12. ஆகின்ற தொண்ணூற்றோ டாறும் பொதுஎன்பர்
    ஆகின்ற ஆறா(று) அருஞ்சைவர் தத்துவம்
    ஆகின்ற நாலேழ்வே தாந்திக்கு வைணவர்க்(கு)
    ஆகின்ற நாலா(று)ஐ யைந்துமாயா வாதிக்கே.
  • 13. தத்துவ மானவை தன்வழி நின்றிடில்
    ளித்தக னாகி விளங்கி யிருக்கலாம்
    பொய்த்தவ மானவை போயிடும் அவ்வழி
    தத்துவ மாவ(து) அகார எழுத்தே.
  • 14. அறிவொன் றிலாதன ஐயேழும் ஒன்றும்
    அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
    அறிகின்ற நீஎன் றருள்செய்தான் நந்தி:
    அறிகின்ற நான்என் றறிந்துகொண் டேனே.
  • 15. சாக்கிர சாக்கிர மாதிதனில் ஐந்தும்
    ஆக்கு மாலவத்தை ஐந்தும் நனவாதி
    போக்கிச் சிவத்தொடும் பொய்யான ஆறாறும்
    நீக்கி நெறிநின்றோன் தானாகி நிற்குமே.
  • 16. ஆணவ மாதிமலம் ஐந்(து) அலரோனுக்(கு)
    ஆணவ மாதிநான் காம்மாற்(கு) அரனுக்கு
    ஆணவ மாதிமூன்(று) ஈசர்க்(கு): இரண்டென்ப
    ஆணவம் ஒன்றே சதாசிவர்க் கானதே.
  • 2. மாயை எழுப்பும் கலாதியை மற்றதின்
    ஏய இராகாதி ஏய்ந்த துரியத்துத்
    தோயும் சுழுனை கனா நனாவும் துன்னி
    ஆயினன் அந்தச் சகலத் துளானே.
  • 3. மேவிய அந்தன் விழிகட் குருடனாம்
    ஆவயின் முன்அடிக் காணும் அதுகண்டு
    மேவும் தடிகொண்டு சொல்லும் விழிபெற
    மூவயின் ஆன்மா முயலுங் கருமமே.
  • 4. மத்திமம் ஒத்த சிலந்தி வலையத்துள்
    ஒத்தங் கிருந்தங் குயிருண்ணு மாறுபோல்
    அத்தனு ஐம்பொறி ஆடகத் துள்நின்று
    சத்தம் முதல்ஐந்தும் தான்உண்ணு மாறே.
  • 5. வைச்சன அச்சு வகையிரு பத்தஞ்சோ(டு)
    உச்ச முடன் அணை வான்ஒரு வன்னுளன்
    பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்று
    நச்சி அவனருள் நான்உய்ந்த வாறே.
  • 6. நாலா றுடன்புருடன் நற்றத் துவம்உடன்
    வேறான ஐயைந்து மெய்ப்புரு டன்பரம்
    கூறா வியோமம் பரம்-எனக் கொண்டனன்
    வேறான நாலேழு வேதாந்தி தத்வமே.
  • 7. ஏலங்கொண் டாங்கே இடையொடு பிங்கலை
    கோலங்கொண் டாங்கே குணத்தி னுடன்புக்கு
    மூலங்கொண் டாங்கே முறுக்கிமுக் கோணிலும்
    காலங்கொண் டானடி காணலு மாமே.
  • 8. நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்
    ஓடிய காலின் ஒடுங்கி யிருந்திடும்
    கூடிய காமம் குறிக்கும் இரதமும்
    நாடிய நல்ல மனமும் உடலிலே.
  • 9. பத்தொடு பத்தும் ஓர் மூன்றும் பகுதியும்
    உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்
    மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும்
    தத்துவம் நாலேழ் எனஉன்னத் தக்கதே.