ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு

பதிகங்கள்

Photo

வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே எரியும் புலன்வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தேன்அவ் வேதத்தின் அந்தமே.

English Meaning:
Truth of Hallowed Feet is End of Vedas

I treasured His hallowed Feet
In the depths of my heart;
And so, shunned the deceitful course of scorching senses,
I swam past the dangerous swirls of good and bad Karma,
And I tasted the nectar of Truth
—The end of all Vedas.
Tamil Meaning:
என்னை, மயக்குவனவாயும் கொடியனவாயும் உள்ள ஐம்பொறி களின் வழிப்போகாமல், என் மனத்துள்ளே சிவனது திருவடிகளை வைத்தேன். அதனால், இணைத்து உழலுதற்கு ஏதுவாகிய இரு வினைகள் என்னும் புதரை அழித்து வேதமாகிய மரத்தின் உச்சிக் கொம்பில் உள்ள மெய்ப் பொருளாகிய தேனை அறிவினால் அடைந்து இன்புறுகின்றேன்.
Special Remark:
இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. ``புலன்`` என்றது பொறிகளை ``எய்த்தேன்`` என்பது முற்றெச்சம். ``மாற்றிட்டு`` என்பதில் இடு, துணைவினை. ``மெய்த்தேன்`` என்பது ஏகதேச உருவகம், ஈற்றடி இறுதியில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது.