
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு
பதிகங்கள்

முடிமன்ன ராய்மூ வுலகம தாள்வர்
அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின்
முடிமன்ன ராய்நின்ற மூவர்கள் ஈசன்
குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே.
English Meaning:
Grace of Feet Exceeds Kingly GreatnessThe crowned monarchs at best may sway the worlds three;
But they who reached His Holy Feet
Their power no bounds shall know;
Know this:
The heavenly beings attired in kingly diadems
But turned his vassals;
And thus became for ever blemishless free.
Tamil Meaning:
ஆராயுமிடத்து, சிவனது திருவடியில் அறிவால் நிலைத்திருப்பவர் இந்நிலவுலகத்தில் மூவுலகையும் ஆளும் மன் னராய் இருந்து யாவர்க்கும் பெருந்தலைவராய் உள்ள மூம்மூர்த்திகள் தாமும் சிவனது ஏவலைச் செய்யும் சிற்றரசராய் நின்றே குற்றம் அற்று விளங்குகின்றனர். அதனால், சிவனடியைச் சேர்ந்தவர் அடையும் இன்பத்திற்கு அளவில்லை.Special Remark:
``அடிமன்னர்`` என்பதை முதலிலும் ``இன்பத்து அள வில்லை`` என்பதை இறுதியிலும் கூட்டியுரைக்க. ``அடிமன்னர்`` என்பதில் ``மன்னர்`` என்பது, `மன்னுதல் உடையவர்` எனப் பொருள் தந்து. மூன்றாம் அடியில் உள்ள ``முடிமன்னர்`` என்பது வினைத் தொகையாய், `மிகமேலே உள்ள தலைவர்` என்னும் பொருட் டாயிற்று. `தேவர்கள்` என்பது பாடம் அன்று. ``குற்றம்`` என்பது அதனால் விளையும் துன்பத்தின் மேல் நின்றது. இறுதியில் ஆதலால், என்பது எஞ்சிநின்றது. `இன்பத்துக்கு` என்பதில் குகரம் தொகுத்தல் பெற்றது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage