ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு

பதிகங்கள்

Photo

முடிமன்ன ராய்மூ வுலகம தாள்வர்
அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின்
முடிமன்ன ராய்நின்ற மூவர்கள் ஈசன்
குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே.

English Meaning:
Grace of Feet Exceeds Kingly Greatness

The crowned monarchs at best may sway the worlds three;
But they who reached His Holy Feet
Their power no bounds shall know;
Know this:
The heavenly beings attired in kingly diadems
But turned his vassals;
And thus became for ever blemishless free.
Tamil Meaning:
ஆராயுமிடத்து, சிவனது திருவடியில் அறிவால் நிலைத்திருப்பவர் இந்நிலவுலகத்தில் மூவுலகையும் ஆளும் மன் னராய் இருந்து யாவர்க்கும் பெருந்தலைவராய் உள்ள மூம்மூர்த்திகள் தாமும் சிவனது ஏவலைச் செய்யும் சிற்றரசராய் நின்றே குற்றம் அற்று விளங்குகின்றனர். அதனால், சிவனடியைச் சேர்ந்தவர் அடையும் இன்பத்திற்கு அளவில்லை.
Special Remark:
``அடிமன்னர்`` என்பதை முதலிலும் ``இன்பத்து அள வில்லை`` என்பதை இறுதியிலும் கூட்டியுரைக்க. ``அடிமன்னர்`` என்பதில் ``மன்னர்`` என்பது, `மன்னுதல் உடையவர்` எனப் பொருள் தந்து. மூன்றாம் அடியில் உள்ள ``முடிமன்னர்`` என்பது வினைத் தொகையாய், `மிகமேலே உள்ள தலைவர்` என்னும் பொருட் டாயிற்று. `தேவர்கள்` என்பது பாடம் அன்று. ``குற்றம்`` என்பது அதனால் விளையும் துன்பத்தின் மேல் நின்றது. இறுதியில் ஆதலால், என்பது எஞ்சிநின்றது. `இன்பத்துக்கு` என்பதில் குகரம் தொகுத்தல் பெற்றது.