
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு
பதிகங்கள்

தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்னந்தி
தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே.
English Meaning:
Guru-is God in Human FormHe assumed human form,
Discarding divine forms four,
And Himself as exalted Guru came,
Signifying the Mudra of Jnana;
He, Nandi, my good Saviour
Blessed me;
It was He who of yore
Planted His Feet of Grace on me.
Tamil Meaning:
ஆன்மா சிவனாகி, அச்சிவனது உண்மை இயல்பில் தனது உண்மை இயல்பு பொருந்துதலால் இன்புற்று, முன்னே செயற்கையாய் வந்து பற்றிய `ஆணவம், கன்மம், மாயை, மாயேயம்` என்னும் நான்கின் இயல்புகளையும் நீக்கிநின்ற சின்முத்திரை நிலையைத் தந்து ஆட்கொண்ட சிவன், ஆங்ஙனம் ஆட்கொள்வதற்கு முன் தான் குருவாகிவந்து தனது திருவடியைச் சூட்டி, அங்ஙனம் சூட்டப்பட்டவனது உள்ளத்திலே நிலைபெறச் செய்தது உண்மை.Special Remark:
எனவே, ``திருவடியை அங்ஙனம் சூட்டித் தாபியாத வழி, முன்னர்க் கூறிய பயன்களை ஆன்மா எய்த மாட்டாது` என்பது போந்தது. ஆக்கம் கூறினமையால், செயற்கையாதல் அறியப்பட்டது. ஐம்மலங்களில் உண்மையில் மலங்களாவன திரோதாயி ஒழிந்தவை யேயாகலின், அவற்றையே கூறினார். `மலங்களது சொரூபமே அகற்றப்பட்டது` என்றதனால், அவைபற்றறக் கழிந்தமை தெளிவா யிற்று. ``ஏனைய முத்திரை`` என வேறு வைத்துக் கூறினமையின், அது தலையாய சின்முத்திரையையே குறித்தது. ``முத்திரை`` என்பது காரிய ஆகுபெயராய் அதனால் உணர்த்தப்படும் நிலையை உணர்த்திற்று. சின்முத்திரையின் இயல்பும், அஃது இங்குக் குறிக்கப் பட்ட நிலையை உணர்த்துமாறும் அறிந்துகொள்க. உயிர்வரக் குற்றியலுகர ஈறு உகரம்பெறுதல் செய்யுள்முடிபு.இதனால், குருவின் திருவடியைப் பெறுதல் ஞானத்திற்கும், வீடுபேற்றிற்கும் வழியாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage