ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
    உய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
    மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
    பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே. 
  • 10. வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
    ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்
    காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்
    டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே. 
  • 11. இட்டதவ் வீடிள காதே யிரேசித்துப்
    புட்டி படத்தச நாடியும் பூரித்துக்
    கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
    நட்டங் கிருக்க நமனில்லை தானே. 
  • 12. புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
    நெறிப்பட உள்ளே நின்மல மாக்கில்
    உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
    புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே. 
  • 13. கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
    ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
    நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
    கூடிக் கொளிற்கோலம் அஞ்செழுத் தாமே. 
  • 14. பன்னிரண் டானை பகல்இர வுள்ளது
    பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
    பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
    பன்னிரண்டா னைக்குப் பகல்இர வில்லையே. 
  • 2. ஆரியன் அல்லன் குதிரை இரண்டுள
    வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
    கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
    வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.
  • 3. புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்;
    கள்ளுண்ண வேண்டா; தானே களிதரும்;
    துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
    உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.
  • 4. பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்
    பிராணன் இருக்கிற் பிறப்பிறப் பில்லை
    பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
    பிராணன் அடைபேறு பெற்றுண் டிரீரே. 
  • 5. ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
    ஆறுதல் கும்பகம் அறுபத்து நால்அதில்
    ஊறுதல் முப்பத் திரண்ட திரேசகம்
    மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.
  • 6. வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
    பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
    தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
    வளியனும் வெட்ட வெளியனு மாமே. 
  • 7. எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
    அங்கே அதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை
    அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்
    சங்கே குறிக்கத் தலைவனு மாமே. 
  • 8. ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
    காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
    காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
    கூற்றை யுதைக்குங் குறியது வாமே. 
  • 9. மேல்கீழ் நடுப்பக்கம் மிக்குறப் பூரித்துப்
    பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து
    மாலாகி உந்தியுட் கும்பித்து வாங்கவே
    ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே.