ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்

பதிகங்கள்

Photo

இட்டதவ் வீடிள காதே யிரேசித்துப்
புட்டி படத்தச நாடியும் பூரித்துக்
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
நட்டங் கிருக்க நமனில்லை தானே. 

English Meaning:
Inhale deep and steady,
That Prana fills the nadis ten;
Exhale slow
That the body does not stir;
Retain prana breath
And downward move Apana breath
Thus sit erect and vanquish Death.
Tamil Meaning:
இறைவன் உயிரைக் குடிவைத்ததாகிய அந்த இல்லம் (உடம்பு) தளர்வுறா வண்ணம் வீணே போக்கப் படுவதாகிய பிராணவாயுவை அங்ஙனம் போகாதவாறு பிராணாயாமத்தால் பயன்படச் செய்யின் இறப்பு இல்லையாகும். (நீண்ட நாள் வாழலாம் என்பதாம்)
Special Remark:
அவ்வீடு - அத்தன்மையதாகிய வீடு. எனவே, \\\"அஃதழியின் உயிர் தீங்கெய்தும்\\\" என்பதாம். புட்டி, வடசொல்; `நிறைவு\\\' என்பது பொருள். தச நாடிகளாவன, `இடைகலை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி, சிகுவை, அலம்புடை, சங்குனி, வைரவன், குகுதை\\\' என்பன.
கொட்டி - கொட்டப்படுவது. இஃது யோகியரல்லாதாரது செயல் பற்றிக் கூறியது. பிராணன், மூக்கு வழியாக இயங்கும் காற்று. அபானன், எருவாய் வழியாக வெளிப்படும் காற்று. பிராணனை மூக்கு வழிப் புறப்படாது கும்பிக்கும்பொழுது, அஃது எருவாய்வழிப் புறப் பட முயலும். அதனை அடக்குதலையே, \\\"அபானனைக் கும்பித்தல்\\\" என்றார். எனவே, இயல்பாக வெளிச்செல்லும் அபானனைக் கும்பிக்கக் கூறினாரல்லர் என்க. \\\"அங்கு நட்டு இருக்க\\\" என மாற்றுக. அங்கு - உந்தித் தானத்தில். நடுதல் - நிலைபெறுத்தல். இக்கும் பகத்தால் முதுகெலும்பின் அடியில் உள்ள \\\"சுழுமுனை\\\" என்னும் நாடியுள் பிராணவாயுச் செல்வதாகும். அதனால் பல நலங்கள் விளையும். அது பற்றி \\\"நமன் இல்லை\\\" என்றார். \\\"நட்டம் இருக்க\\\" என்பது பாடம் அன்று.
இதனால், \\\"கும்பகம் ஓட்டைபோகாதவாறு காத்தல் வேண்டும்\\\" என்பது கூறப்பட்டது.