
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்
பதிகங்கள்

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.
English Meaning:
The breath within risesAnd wanders as it lists;
Control that and purify within;
Then shall your limbs glow red
Your hair turn dark
And God within shall leave you never.
Tamil Meaning:
வெளி வருவதும், உட்புகுவதுமாய்ப் பயனின்றி அலைகின்ற பிராண வாயு, மேற்கூறிய நெறிக்குட்பட்டு நிற்குமாற்றால் தூயதாகச் செய்யின், உடம்பு ஒளிவிட்டு விளங்கும்; தலை, முகம் முதலானவற்றில் உள்ள மயிர்கள் நரையாது கறுப்பனவாம். இவற்றினும் மேலாகச் சிவபெருமான் அத்தகைய யோகியின் உள்ளத்தை விட்டுப் புறம் போகான்.Special Remark:
\\\"புறப்பட்டுப் போகான்\\\" என்றது `தியானம் சலியாது\\\' என்றவாறாம். எனவே, \\\"இதுவே பிராணாயாமமாகிய பேருழைப் பிற்குச் சிறந்த பயன்\\\" என்பது போந்தது.இதனால், பிராணாயாமம் மேல் வரும் யோக உறுப்புக்கட்கு இன்றியமையாச் சாதனமாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage