ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 10. ஆறு முகத்தின் அதிபதி தான்` என்றும்
    கூறு சமயக் குருபரன் தான் `என்றும்
    தேறினர் தேறுத் திருவம் பலத்துள்ளே
    வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே`.
  • 11. அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
    எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொலி
    உம்பர மாம் நாதத்து ரேகையுள்
    தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே.
  • 12. ஆடிய காலும் அதிற்சிலம் போசையும்
    பாடிய பாட்டும் பலவான நட்டமும்
    கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
    தேடிஉள் ளேகண்டு தீர்ந்தற்ற வாறே.
  • 13. இருதயந் தன்னில் எழுந்த பிராணன்
    கரசர ணாதி கலக்கும் படியே
    அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன்
    குரவனாய் எங்கணும் கூத்துகந் தானே.
  • 2. குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம்
    சிரானந்தம் பூரித்துத் தென்றிசை சேர்ந்து
    புரானந்த போகனாய்ப் பூவையும் தானும்
    நிரானந்த மாக நிருத்தஞ்செய் தானே.
  • 3. ஆதி பரன்ஆட அங்கை அனலாட
    ஓதும் சடையாட உன்மத்தம் உற்றாடப்
    பாதி மதியாடப் பாராண்டம் மீதாட
    நாதமொ டாடினான் நாதாந்த நட்டமே.
  • 4. கும்பிட அம்பலத் தாடிய கோநடம்
    அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்
    செம்பொரு ளாகும் சிவபோகம் சேர்ந்துற்றால்
    உம்பர மோனஞா னாந்தத்தின் உண்மையே.
  • 5. மேதினி மூவேழ் மிகும்அண்டம் மூவேழு
    சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு
    நாதமொடு அந்தம் நடனாந்தம் நாற்பதம்
    பாதியோ டாடும் பரன்இரு பாதமே.
  • 6. இடைபிங் கலைஇம வானோ டிலங்கை
    நடுநின்ற மேரு நடுவாம் சுழுனை
    கடவும் திலைவனம் கைகண்ட மூலம்
    படர்வொன்றி யெண்ணும் பரமாம் பரமே.
  • 7. ஈறான கன்னி குமரியே காவிரி
    வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்பேழும்
    பேறான வேதா கமமே பிறங்கலால்
    மாறான தென்திசை வையகம் சுத்தமே.
  • 8. நாதத் தினில் ஆடி நாற்பதத் தேஆடி
    வேதத் தினில் ஆடித் தழல்அந்தம் மீதாடிப்
    போதத் தினில் ஆடிப் புவனம் முழுதாடும்
    தீதற்ற தேவாதி தேவர் பிரானே.
  • 9. தேவரொ டாடித் திருவம் பலத்தாடி
    மூவரொ டாடி முனிகணத் தோடாடிப்
    பாவினுள் ஆடிப் பராசத் தியில்ஆடிக்
    கோவிலுள் ளாடிடும் கூத்தப் பிரானே.