ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் 14. பொற்றில்லைக் கூத்து

பதிகங்கள்

Photo

கும்பிட அம்பலத் தாடிய கோநடம்
அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்
செம்பொரு ளாகும் சிவபோகம் சேர்ந்துற்றால்
உம்பர மோனஞா னாந்தத்தின் உண்மையே.

English Meaning:
Dance Cosmic

There in the Holy Hall the Lord danced,
The Jivas to adore;
The dance He dances,
Is the Dance Cosmic;
It is the dance that takes you
To Truth of Siva`s realm;
There verily is the limit of Mauna Jnana Bliss.
Tamil Meaning:
அழகிய திருமேனியுடன் பெருமான் தில்லை யம்பலத்தில் ஆடுகின்ற தலைமை வாய்ந்த அந்த நடனம் அகில உலகங்களுக்குமான நடனமாகும், அதனை வணங்க வேண்டி அவ்வம்பலத்தை அடைந்தால், அவ்அடைவே மேலான ஞானத்தின் முடிநிலையாகிய மௌன நிலைப்பேறாகும்.
Special Remark:
``அம்பரன்`` என்பதை முதலிலும், `கும்பிட` என்பதை இரண்டாம் அடியின் இறுதியிலும் கூட்டி உரைக்க. அம்பலம், அதிகாரத்தால் இங்குத் தில்லையம்பலம் ஆயிற்று. கோ - தலைமை. `அகிலாண்டத்திற்கும் ஆடும் நட்டமாம்` என்க. செம்பொருள், கண்கூடாக அறியப்படும் பொருள். ஈண்டுள்ளாரால் அங்ஙனம் அறியப் படும் சிவலோகம் தில்லையம்பலம்` என்க. ``கும்பிடச் சேர்ந்துற்றால்`` என்றது, `கும்பிடுதற்கு முன்பே பயன் விளையும்` என விளைவு கூறிய வாறு. உம்பர்அம் எனப் பிரிக்க. உம்பர் - மேன்மை. அம் - அழகு; சிறப்பு` என்றபடி `மோனமாகிய அந்தம்` என இயையும், மௌன மாவது, தற்போதம் அற்ற நிலை. ``மோனம் என்பது ஞான வரம்பு``*\\\\`20என ஔவையாரும் அருளிச் செய்தார். ஞான அந்தத்தின் உண்மை - ஞானத் -தின் முடிநிலையால் விளையும் மெய்யான பேறு; பரமுத்தி. தில்லைத் திருநடம், கண்டு வணங்கினஆர்க்கு வீடுபேற்றைத் தரும்` என்றபடி.
இதனால் தில்லைக் கூத்தின் தலைமையும், பயனும் கூறப்பட்டன.