ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் 14. பொற்றில்லைக் கூத்து

பதிகங்கள்

Photo

இருதயந் தன்னில் எழுந்த பிராணன்
கரசர ணாதி கலக்கும் படியே
அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன்
குரவனாய் எங்கணும் கூத்துகந் தானே.

English Meaning:
He Dances as Prana

As Prana that in heart arises
To permeate your hands and feet,
And sense organs all,
—Thus He dances
In the arena of nine gems,
He the Red-Ruby Dancer;
As the Holy Guru He danced in rapture
In places all.
Tamil Meaning:
(`பிற உலோகங்களை நோக்கப் பொன் உயர்ந்தது` என்பதில் ஐயம் இல்லை. ஆயினும், `பொன்னிலும் மாணிக்கம் உயர்ந்தது` என்பது தெளிவு ஆதலால்) ஐவகை மன்றினுள்ளும் மணிமன்றினுள் ஆடும் ஆடற்பிரானே யோகியர்க்கு யோகமும், போகியர்க்குப் போகமும் ஆகின்ற அருட் கூத்தினை எல்லா இடங்களிலும் சென்று ஆடுகின்றான். `அஃது எதுபோலும்` எனின், இருதயத்திலே நிறைகின்ற பிராண வாயுவும் அவ்விடத்தினின்றும் குருதியோடு ஓடி உடம்பெங்கும் நிறைதல் போலும்.
Special Remark:
`இச்சிறப்புப் பற்றியே அந்த மன்று மணிமன்றாய் உள்ளது` என்க. அது திருஆலங்காட்டு மன்றமாம். அவ்விடத்துக் கூத்து, காலை உயர்த்தி ஆடும் கூத்து (ஊர்த்துவ நடனம்) ஆதலும், ``எண்டோள் வீசிநின்று ஆடும் ஆடல்``33திருமுறை - 4.9.2. ஆதலும் எண்ணத் தக்கன.
``இன்னும் வேண்டும், நான் மகிழ்ந்து பாடி
அறவா, நீ ஆடும்போது `உன் அடியின்கீழ் இருக்க``*
என வேண்டிய அம்மைக்கு. இறைவன் ஆலங்காட்டு நடனத்திலே அவ்வாறு இருக்க அருள்புரிந்தமையும் கருதத் தக்கது. முன் அதிகாரத்தில் நாயனார் சிவன் ஆடும் இடங்களை எல்லாம் கட்டியதில், கனகா சலத்தில் ஆடுதலுக்கும் முன்னே காயோடு ஆடிய ஆலங்காட்டு நடனத்தையே முதலாவதாகக் குறித்தார். இது உலகம் காளியால் அழிந்தொழியாதவாறு காத்த நடனமாகச் சொல்லப்படுதலும் நோக்கத்தக்கது.
``தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெலாம்
ஊன்புக்க வேற்காளிக்(கு) ஊட்டாங்காண் சாழலே``*