ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம்

பதிகங்கள்

Photo

ஆற்றில் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட வாறொக்கும்
நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.

English Meaning:
They That Shun Tapas Hunger Forever

In fear they ran from the crocodile in the river
And on the bank they fell into the embrace of the bear
Thus are they the ignorant of scriptures,
Who from austere tapas run away,
For food and in hunger roam for ever.
Tamil Meaning:
நூல்முறைமையை அறியாதவர் பசி, வெயில், மழை முதலியவற்றால் வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு தவத்தைச் செய்யமாட்டாராய், இல்லறத்தார் இடும் சோறு முதலிய வற்றைப் பெற்றுப் பிழைத்தற்பொருட்டுத் துறவு நிலையிற்புகுந்து தவத்தவர்போல வேடம்பூண்டு திரிதல், யாற்றில் ஒருதுறைக்கண் முதலை இருத்தலைக் கண்டு அஞ்சி அதனைவிட்டு நீங்கி, மற்றொரு துறைக்கண் குட்டிகளை ஈன்ற கரடி அக்குட்டிகளோடு குளித்துக் கொண்டிருத்தலை யறியாது அதன்கண் இறங்கி அக்கரடியினிடத்து அகப்பட்டாற்போல்வதாம்.
Special Remark:
யாறு வாழ்க்கைக்கும், முதலை உள்ள துறை தொழில் முயற்சியோடு கூடிய இல்லறத்திக்கும், ஈற்றுக் கரடியுள்ள துறை நோன்றலோடு கூடிய துறவு நிலைக்கும் உவமையாயினவாறு அறிக. நோற்றல் - நோன்றல்; பொறுத்தல்.
இதனால், `உள்ளத்தால் தவத்தவராகாது, புறத்தே வேட மாத்திரையால் தவத்தவர்போல நிற்பாரது போலித்தவம் முடிவில் துன்பமே பயத்தலல்லது, சிறிதும் இன்பம் பயலாது\\\' என அதனது இகழ்ச்சி கூறப்பட்டது.