ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம்

பதிகங்கள்

Photo

ஒத்து மிகவும்நின் றானை யுரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுக்கும் முனிவ ரெனும்பதம்
சத்தான செய்வது தான்தவந் தானே.

English Meaning:
Tapas Gives Bhakti and Mukti

In intimacy He stands within us;
Pray that He grant you Bhakti;
Prostrate that He grant you Mukti;
Truly, it is tapas that makes Munis divine.
Tamil Meaning:
அவரவரது பரிபாகநிலைக்கு ஏற்ப அவரோடு இயைந்து நீங்காது நின்று அருளுபவனாகிய இறைவனை அவனுக்கு அடியராய் நின்று வாயார வாழ்த்துதல் அவன்பால் பக்தியை மிகுவிக்கும். ஐம்பொறி யடக்கல் முதலிய நோன்புச் செயல்கள் அவர் முனிவராம் நிலையை நிலைபெறுவிக்கும். இறைவனை அடிபணிந்து தொண்டுகள் பலவும் செய்து நிற்றல் முத்தியைத் தரும்.
Special Remark:
அவை முத்திதரும் `என்றால், அவற்றுள் ஒன்றும் அன் றாகிய தவம் என்னதவம்` என்பது குறிப்பு. `அடியாராய்` என ஆக்கம் வருவிக்க. அடியாராதலாவது, ``பாரம் ஈசன் பணியலது ஒன்றிலர்`` 8 ஆதல், இறுதிக்கண் வைக்கற்பாலதாகிய இது செய்யுள் நோக்கி இடையில் வைக்கப்பட்டது. சத்து - நிலைபேறு ``தான்`` இரண்டும் அசை நிலைகள் `சத்தானவையாகவேச் செய்வது` என ஆக்கம் விரித்து உரைக்க. முனிவர் நிலை பலவாதல் பற்றி, ``சத்தானவையாக`` என்றார். தவம், இங்கு நோன்பு. அதுதான் செயல் வகையாற் பலவாயினும், `நோன்பு` என ஒன்றாய் அடங்கல் பற்றி ஒருமையாற் கூறினார்.
இதனால், `ஒத்து நின்றானை ஒருவாற்றானும் அணுகாத தவம் தவம் அன்றாம்` என அதன் இகழ்ச்சி கூறப்பட்டது.