
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம்
பதிகங்கள்

கூடித் தவம்செய்து கண்டேன் குரைகழல்
தேடித் தவம்செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவம்செய்வ தேதம் இவைகளைந்(து)
ஊடிற் பலஉல கோர்எத் தவரே.
English Meaning:
Tapas is the Yearning of HeartIn oneness of mind I did tapas
And witnessed Lord`s triumphant Feet;
In eagerness of quest I did tapas
And witnessed Siva-State;
That alone is tapas
That you perform in the yearning of heart;
What avails the tapas of those,
Who thus perform not?
Tamil Meaning:
சிவனடியார்களோடுகூடி, அவர்கள் செய்யும் தவத்தையே நானும் செய்து, அதன் பயனாகச் சிவனது திருவடியைத் தரிசித்தேன்; பின் அத்திருவடியின்கீழ் இருத்தலாகிய வீடுபேற்றை அடைய விரும்பியே பின்னும் தவத்தைச் செய்து அதனை அடைந்தேன். இவ் இருதன்மைகளையும் நீக்கி வாளா மெய்வருந்தச் செய்யும் தவம் தவமாகாது, அவமாம். ஆகவே, உலகோர் பலர் இவ்இரண்டையும் விரும்பாது பிணங்குவாராயின், அவரை எத்தவத்தோர் என்பது!.Special Remark:
``சிவகதி கண்டேன்`` என்றதனால் குரை கழலும் அவனுடையதாயிற்று. அவ்விரண்டாலும் கூடுதற்கும், தேடுதற்கும் செயப்படுபொருள் இவையென்பது விளங்கிற்று. `இவை களைந்து செய்வது ஏதம்` என மாற்றுக. பிணங்குதல், இந்நெறியொடு மாறுபட்டுப் பிறவாறு செய்தல். ``எத் தவத்தோர்`` என்பது, `யாதொரு தவத்தையும் உடையரல்லர்` என்பது குறித்து நின்றது.இதனால், `சிவநெறி வழிபடாது செய்வன தவமாகா` என அவைகளது இகழ்ச்சி கூறப்பட்டது. ``சிவத்தைப் பேணின் தவத்திற் கழகு``3 என்றார் ஔவையாரும்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage