ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம்

பதிகங்கள்

Photo

கூடித் தவம்செய்து கண்டேன் குரைகழல்
தேடித் தவம்செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவம்செய்வ தேதம் இவைகளைந்(து)
ஊடிற் பலஉல கோர்எத் தவரே.

English Meaning:
Tapas is the Yearning of Heart

In oneness of mind I did tapas
And witnessed Lord`s triumphant Feet;
In eagerness of quest I did tapas
And witnessed Siva-State;
That alone is tapas
That you perform in the yearning of heart;
What avails the tapas of those,
Who thus perform not?
Tamil Meaning:
சிவனடியார்களோடுகூடி, அவர்கள் செய்யும் தவத்தையே நானும் செய்து, அதன் பயனாகச் சிவனது திருவடியைத் தரிசித்தேன்; பின் அத்திருவடியின்கீழ் இருத்தலாகிய வீடுபேற்றை அடைய விரும்பியே பின்னும் தவத்தைச் செய்து அதனை அடைந்தேன். இவ் இருதன்மைகளையும் நீக்கி வாளா மெய்வருந்தச் செய்யும் தவம் தவமாகாது, அவமாம். ஆகவே, உலகோர் பலர் இவ்இரண்டையும் விரும்பாது பிணங்குவாராயின், அவரை எத்தவத்தோர் என்பது!.
Special Remark:
``சிவகதி கண்டேன்`` என்றதனால் குரை கழலும் அவனுடையதாயிற்று. அவ்விரண்டாலும் கூடுதற்கும், தேடுதற்கும் செயப்படுபொருள் இவையென்பது விளங்கிற்று. `இவை களைந்து செய்வது ஏதம்` என மாற்றுக. பிணங்குதல், இந்நெறியொடு மாறுபட்டுப் பிறவாறு செய்தல். ``எத் தவத்தோர்`` என்பது, `யாதொரு தவத்தையும் உடையரல்லர்` என்பது குறித்து நின்றது.
இதனால், `சிவநெறி வழிபடாது செய்வன தவமாகா` என அவைகளது இகழ்ச்சி கூறப்பட்டது. ``சிவத்தைப் பேணின் தவத்திற் கழகு``3 என்றார் ஔவையாரும்.