ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. 
  • 10. மாறா மலக்குதந் தன்மேல் இருவிரல்
    கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்
    ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்
    கூறா உபதேசங் கொண்டது காணுமே. 
  • 11. நீல நிறமுடை நேரிழை யாளொடுஞ்
    சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு
    ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
    பாலனு மாவர் பராநந்தி ஆணையே. 
  • 12. அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
    பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்
    உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
    கண்டங் கறுத்த கபாலியு மாமே. 
  • 13. பிண்டத்துள் உற்ற பிழைக்கடை வாசலை
    அண்டத்துள் உற்ற தடுத்தடைத் தேவிடின்
    வண்டிச்சிக் கும்மம் மலர்க்குழல் மாதரார்
    கண்டிச்சிக் கும்மந்நற் காயமு மாமே. 
  • 14. சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி
    அழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன்
    கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே
    நிழலுளுந் தெற்றுளும் நிற்றலும் மாமே. 
  • 15. நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்
    தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்
    ஊன்கண்டு கொண்ட உணர்வு மருந்தாக
    மான்கன்று நின்று வளர்கின்ற வாறே. 
  • 16. ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
    நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
    பாகு படுத்திப்பல் கோடி களத்தினால்
    ஊழ்கொண்ட மந்திரந் தன்னால் ஒடுங்கே. 
  • 2. உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
    உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
    உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
    உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே. 
  • 3. சுழற்றிக் கொடுக்கவே சுற்றிக் கழியும்
    கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்
    துழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்
    கழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே. 
  • 4. அஞ்சனம் போலுடல் ஐஅறும் அந்தியில்
    வஞ்சக வாதம் அறும்மத்தி யானத்தில்
    செஞ்சிறு காலையிற் செய்திடில் பித்தறும்
    நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே. 
  • 5. மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
    ஏன்ற இயந்திரம் பன்னிரண் டங்குலம்
    நான்றஇம் மூட்டை யிரண்டையுங் கட்டியிட்
    டூன்றி யிருக்க உடம்பழி யாதே.
  • 6. நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
    நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
    நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
    நூறும் அறுபதும் ஆறும் புகுவரே. 
  • 7. சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால்
    மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாம்
    தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும்
    சத்தியம் சொன்னோம் சதாநந்தி ஆணையே. 
  • 8. திறத்திறம் விந்து திகழும் அகாரம்
    உறப்பெற வேநினைந் தோதும் சகாரம்
    மறிப்பது மந்திரம் மன்னிய நாதம்
    அறப்பெறல் யோகிக் கறநெறி யாமே.
  • 9. உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச்
    சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால்
    முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்
    சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே.