ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. கொடுகொட்டி பாண்டரம் கோடுசங் காரம்
    நடம்எட்டோ(டு) ஐந்(து) ஆறு நாடியுள் நாடும்
    திடம்உ ற்றெழும் தேவ தாருவனத் தில்லை
    வடம்உற்ற மாவன மன்னவன் தானே.
  • 10. மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
    கூரும்இவ் வானின் இலங்கை குறிஉறும்
    சாரும் திலைவனம் தண்மா மலயத்தூ
    டேறும் சுழுமுனை இவைசிவ பூமியே.
  • 11. பூதல மேருப் புறத்தான தெக்கணம்
    ஓதும் இடைபிங் கலைஒண் சுழுனையாம்
    பாதி மதியோன் பயில்திரு அம்பலம்
    ஏதமில் பூதாண்டத் தெல்லையின் ஈறே.
  • 2. தெற்கு வடக்குக் கிழக்குமேற் குச்சியில்
    அற்புத மானஓர் அஞ்சு முகத்திலும்
    ஒப்பில்பே ரின்பத் துபய உபயத்துள்
    தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே.
  • 3. அடியார் அரன்அடி ஆனந்தங் கண்டோர்
    அடியா ரவர்அர னத்தனரு ளுற்றோர்
    அடிஆர் பவரே அடியவ ராவர்
    அடியார்பொன் னம்பலத் தாடல்கண் டாரே.
  • 4. அடங்காத என்னை அடக்கி அடிவைத்(து)
    இடங்காண் பரானந்தத் தேஎன்னை இட்டு
    நடந்தான் செயும்நந்தி தன்ஞானக் கூத்தன்
    படந்தான்செய் உள்ளுட் படிந்திருந் தானே.
  • 5. உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனை
    செம்பொற் றிருமன்றுட் சேவகக் கூத்தனை
    சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை
    இன்புறு நாடிஎன் அன்பில்வைத் தேனே.
  • 6. மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்
    பூணுற்ற மன்றுட் புரிசடைக் கூத்தனைச்
    சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை
    ஆணிப்பொற் கூத்தனை யாரறி வாரே.
  • 7. விம்மும் வெருவும் விழும் எழும் மெய்சோரும்
    தம்மையும் தாம்அறி யார்கள் சதுர்கெடும்
    செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்
    அம்மலர்ப் பொற்பாதத்(து) அன்புவைப் பார்கட்கே.
  • 8. தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்
    வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்
    ஓட்டறும் ஆசை அறும் உளத் தானந்த
    நாட்டம் முறுக்குறு நாடகம் காணவே.
  • 9. காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
    கூளியோ டாடிக் குவலயத் தேஆடி
    நீடிய நீர்த்தீக்கால் நீள்வானத் தேயாடி
    நாளுற அம்பலத் தேஆடும் நாதனே.