ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து

பதிகங்கள்

Photo

அடியார் அரன்அடி ஆனந்தங் கண்டோர்
அடியா ரவர்அர னத்தனரு ளுற்றோர்
அடிஆர் பவரே அடியவ ராவர்
அடியார்பொன் னம்பலத் தாடல்கண் டாரே.

English Meaning:
He Dances, for His Devotees to Witness

Holy Devotees are they,
Who bliss of Hara`s Feet attained;
Holy Devotees are they,
Who in Hara entered;
Holy Devotees are they,
Who to Siva`s Holy Feet cling;
Holy Devotees are they,
Who witnessed true
The Lord`s dance in golden Hall (of the astral sphere).
Tamil Meaning:
பொன்னம்பலம் முதலிய ஐந்து அம்பலங்களிலும், மற்றும் பல இடங்களிலும் ஆடற் பெருமானைக் கண்டு வணங்கினவரே `அடியார்` எனப்படுவர். அவரே சிவானந்தத்தை அடைந்தவர்; சிவன் அருளைப் பெற்றனர்; சிவனது திருவடியைச் சேர்ந்தவர்.
Special Remark:
``பொன்னம்பலத்தாடல் கண்டோர்`` என்பதை முதலிற் கூட்டியுரைக்க. தலைமைபற்றிய இதனைக் கூறவே, மற்றவை தழுவப் பட்டன. மூன்றாம் அடியொழிந்த மற்றை மூன்றடிகளிலும் ``அடியார்`` என வந்தனவும், மூன்றாம் அடியில் ``அடியில்`` என்றதும் சொற்பொருட் பின்வருநிலையனி. ``அரன் அத்தன்`` என்றது இருபெயர் ஒட்டு.
இதனால், சிவாலய தரிசனத்தில் ஆடற்பெருமானது தரிசனத்தினஅ இன்றியாமையாச் சிறப்புக் கூறப்பட்டது.