ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. பொன்னால் சிவசா தனம்பூதி சாதனம்
    நன்மார்க்க சாதன மாஞான சாதனம்
    துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனம்
    சன்மார்க்க சாதன மாம்சுத்த சைவர்க்கே.
  • 10. விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள்
    கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள்
    எண்ணினைச் சென்றணு காமல் எணப்படும்
    அண்ணலைச் சென்றணு காபசு பாசமே.
  • 11. ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக
    நின்று சமய நிராகாரம் நீங்கியே
    நின்ற பராற்பர நேயத்தைப் பாதத்தால்
    சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே.
  • 2. கேடறு ஞானி கிளர்ஞான பூபதி
    பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தி
    னூடுறு ஞானோ தயன்உண்மை முத்தியோன்
    பாடுறு சுத்தசை வன்பத்தன் நித்தனே.
  • 3. ஆகமம் ஒன்பான் அதில்ஆன நாலேழு
    மோகமில் நாலேழும் முப்பேதம் உற்றுடன்
    வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மைஒன்
    றாக முடிந்த தருஞ்சுத்த சைவமே.
  • 4. சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓரேழும்
    சத்தும் அசத்தும் தணந்த பராபரை
    உய்த்த பராபரை உள்ளாம் பராபரை
    அத்தன் அருட்சத்தி யாய்எங்கு மாமே.
  • 5. சத்தும் அசத்தும் தணந்தவர் தானாகிச்
    சித்தும் அசித்தும் தெரியாச் சிவோகமாய்
    முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினோர்
    சித்தியும் அங்கே சிறந்துள தானே.
  • 6. தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற
    மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற
    முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை
    உன்னத் தகும் சுத்த சைவர் உபாயமே.
  • 7. பூரணந் தன்னிலே வைத்தற்ற அப்போதத்
    தாரண வந்த மதிசித்தாந் தத்தொடு
    நேரென ஈராறும் நீடும் நெடும்போகம்
    காரண மாம்சுத்த சைவர்க்குக் காட்சியே.
  • 8. மாறாத ஞானம் மதிப்பற மாயோகம்
    தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப்
    பேறான பாவனை பேணி நெறிநிற்றல்
    கூறாகும் ஞானி சரிதை குறிக்கிலே.
  • 9. வேதாந்தங் கண்டோர் பிரமவித் தியாதரர்
    நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்
    வேதாந்த மல்லாத சித்தாந்தங் கண்டுளோர்
    சாதா ரணர் அன்ன சைவர் உபாயரே.