ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. இலிங்கம தாகுவ தியாரும் அறியார்
    இலிங்கம தாகுவ தெண்டிசை யெல்லாம்
    இலிங்கம தாகுவ தெண்ணெண் கலையும்
    இலிங்கம தாக எடுத்த துலகே.
  • 10. மறையவர் அற்சனை வண்படி கந்தான்
    இறையவர் அற்சனை ஏய்பொன் னாகும்
    குறைவில் வசியர்க்குக் கோமள மாகும்
    துறையுடைச் சூத்திரர் சொல்வாண லிங்கமே.
  • 11. போது புனைகழல் பூமிய தாவது
    மாது புனைமுடி வானக மாவது
    நீதியுள் ஈசன் உடல்விதம் பாய்நிற்கும்
    ஆதி உறநின்ற(து) அப்பரி சாமே.
  • 12. தரைஉற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம்
    திரைபொரு நீரது மஞ்சனச் சாலை
    வரைதவழ் மஞ்சுநீர் வான்உடு மாலை
    கரைஅற்ற நந்தி கலைஉந்திக் காமே.
  • 13. அதுஉணர்ந் தோன்ஒரு தன்மையை நாடி
    எதுஉண ராவகை நின்றனன் ஈசன்
    புதுஉணர் வான புவனங்கள் எட்டும்
    இதுஉணர்ந் தென்னுடல் கோயில்கொண் டானே.
  • 14. அகலிட மாய்அறி யாமல் அடங்கும்
    உகலிட மாய்நின்ற ஊனத னுள்ளே
    பகலிட மாம்உளம் பாவ வினாசன்
    புகலிட மாய்நின்ற புண்ணியன் றானே.
  • 2. உலகில் எடுத்தது சத்தி முதலா
    உலகில் எடுத்தது சத்தி வடிவா
    உலகில் எடுத்தது சத்தி குணமா
    உலகம் எடுத்த சதாசிவன் றானே.
  • 3. போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
    ஆகமும் ஆறாறு தத்துவத் தப்பாலாம்
    ஏகமும் நல்கி யிருக்கும் சதாசிவம்
    ஆகம அத்துவா ஆறும் சிவமே.
  • 4. ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் மீசனை
    வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்
    றார்த்தனர் அண்டங் கடந்தப் புறம்நின்று
    சாத்தனன் என்னும் கருத்தறி யாரே.
  • 5. ஒண்சுட ரோன் அயன் மால் பிர சாபதி
    ஒண்சுட ரான இரவியோ டிந்திரன்
    கண்சுட ராகிக் கலந்தெங்குந் தேவர்கள்
    தண்சுட ராய்எங்கும் தற்பரம் ஆமே.
  • 6. தாபரத் துள்நின் றருளவல் லான் சிவன்
    மாபரத் துண்மை வபடுவா ரில்லை
    மாபரத் துண்மை வபடு வாருக்கும்
    பூவகத் துள்நின்ற பொற்கொடி யாகுமே.
  • 7. தூய விமானமும் தூலம தாகுமால்
    ஆய சதாசிவம் ஆகும்நற் சூக்குமம்
    பாய பலிபீடம் பத்திர லிங்கமாம்
    ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.
  • 8. முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
    கொத்தும்அக் கொம்பு சிலை நீறு கோமளம்
    அத்தன்றன் ஆகமம் அன்னம் அரிசியாம்
    உய்த்ததன் சாதனம் பூமணல் லிங்கமே.
  • 9. துன்றுந் தயிர் நெய் பால் துய்ய மெழுகுடன்
    கன்றிய செம்பு கனல்இர தம் சந்தம்
    வன்றிறற் செங்கல் வடிவுடை வில்வம் பொன்
    தென்றிருக் கொட்டை தெளிசிவ லிங்கமே.