ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்

பதிகங்கள்

Photo

தாபரத் துள்நின் றருளவல் லான் சிவன்
மாபரத் துண்மை வபடுவா ரில்லை
மாபரத் துண்மை வபடு வாருக்கும்
பூவகத் துள்நின்ற பொற்கொடி யாகுமே.

English Meaning:
Lord is the Golden support of Heart

Pervading all Nature, Siva blesses all;
But they know not the Truth and adore Him not;
To them that adore Him that is immanent
He is the golden stalk of the heart`s lotus within.
Tamil Meaning:
சிவனது மிக மேலான உண்மை நிலையை உணர்ந்து அவனை வழிபடுவோர் மிக அரியர். அதனை உணர்ந்து வழிபடுகின்ற அவர்கட்கும் பூவைத் தன்னுள்ளே அடக்கியுள்ள அழகிய கொடி அப்பூவைச் சிறிது சிறிதாகவே வெளிப்படுத்துதல் போலத் தனது உண்மை நிலையை வெளிப்படுத்துவான். ஆகவே அவனது பொது நிலையாகிய இலிங்க வடிவிலும் அவன் நின்று படிமுறையால் மேல் நிலையை அருளுவான்.
Special Remark:
`ஆகவே இலிங்க வடிவம் அவனது அகண்ட நிலையோ, உண்மை நிலையோ அன்று என இகழாது கொள்க` என்பது குறிப்பெச்சம். ``தாபரத் துள்நின்று அருளவல்லான்`` என்பதை இறுதியிற் கூட்டியுரைக்க. தாபரம் - பெயர்ப்பொருளாகிய திருவுருப் படிமங்கள். ``வழிபடுவாளர்க்கும்`` - என்பது பாடம் அன்று. ``ஆகும்`` என்பதில் ஆக்கம் உவமை குறித்து நின்றது. சுட்டிக் கூறா உவமம் ஆகலின் பொதுத் தன்மை வருவிக்கப்பட்டது.
இதனால், இலிங்க வழிபாட்டின் சிறப்பு கூறப்பட்டது.