ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்(து)
    அம்மான் அடிதந்(து) அருட்கடல் ஆடினோம்
    எம்மாய மும்விடுத்(து) எம்மைக் கரந்திட்டுச்
    சும்மா திருந்திடம் சோதனை ஆகுமே.
  • 10. எறிவது ஞானத்(து) உறைவாள் உருவி
    அறிவத னோடே அவ் ஆண்டகை யானைச்
    செறிவது தேவர்க்கும் தேவர் பிரானைப்
    பறிவது பல்கணம் பற்றுவிட் டாரே.
  • 11. ஆதிப் பிரான்தந்த வாள்அங்கைக் கொண்டபின்
    வேதித்திங் கென்னை விலக்கவல் லார்இல்லை
    சோதிப்பன் அங்கே சுவடும் படாவண்ணம்
    ஆதிக்கண் தெய்வம் அவன்இவன் ஆமே.
  • 12. அந்தக் கருவை அருவை வினைசெய்தற்
    பந்தப் பனிஅச்சம் பல்பிறப் பும்வாட்டிச்
    சிந்தை திருத்தலும் சேர்ந்தார்அச் சோதனை
    சந்திக்கத் தற்பர மாகும் சதுரர்க்கே.
  • 13. உரையற்ற தொன்றை உரைத்தான் எனக்குக்
    கரையற் றெழுந்த கலைவேட் பறுத்துத்
    திரையற்ற என்னுடல் நீங்கா திருத்திப்
    புரையற்ற என்னுட் புகும்தற் பரனே.
  • 2. அறிவுடை யான்அரு மாமறை யுள்ளே
    செறிவுடை யான்மிகு தேவர்க்கும் தேவன்
    பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த
    குறியுடை யானொடும் கூடுவன் நானே.
  • 3. குறியாக் குறியினில் கூடாத கூட்டத்(து)
    அறியா அறிவில் அவிழ்ந்தே சித்தமாய்
    நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றும்
    செறியாச் செறிவே சிவம்என லாமே.
  • 4. காலினில் ஊறும் கரும்பினிற் கட்டியும்
    பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்
    பூவினுள் நாற்றமும் போல் உளன் எம்மிறை
    காவலன் எங்கும் கலந்துநின் றானே.
  • 5. விருப்பொடு கூடி விகிர்தரை நாடில்
    பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல
    இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்
    நெருப்புரு வாகி நிகழ்ந்து நிறைந்தே.
  • 6. நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து
    வந்தென் அகம்படி கோயில்கொண் டான் கொள்ள
    `எந்தைவந் தான்`என்(று) எழுந்தேன் எழுதலும்
    சிந்தையி னுள்ளே சிவன்இருந் தானே.
  • 7. நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
    புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்
    பன்மையில் யாதென நும்மைப் பரிசுசெய்
    தொன்மையின் உண்மை தொடர்ந்து நின்றானே
  • 8. தொடர்ந்துநின் றான்என்னைச் சோதிக்கும் போது
    தொடர்ந்துநின் றான்நல்ல நாதனும் அங்கே
    படர்ந்துநின்(று) ஆதிப் பராபரன் எந்தை
    கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே.
  • 9. அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள்
    இவ்வழி தந்தை தாய் கேளிரே ஒக்கும்
    செவ்வழி சேர்சிவ லோகத் திருத்திடும்
    இவ்வழி நந்தி யியல்பது தானே.