ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. நாசி நுனியினின் நான்மூ விரலிடை
    ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
    பேசி யிருக்கும் பெருமறை அம்மறை
    கூசி யிருக்கும் குணம் அது வாமே.
  • 10. பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை
    அருளது போற்றும் அடியவ ரன்றிச்
    சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின்
    மருளவர் சிந்தை மயங்குகின் றாரே.
  • 11. வினையால் அசத்து விளைவ துணரார்
    வினைஞானந் தன்னிலே விடாதுந் தேரார்
    வினைவீட வீடென்னும் பேதமும் ஓதார்
    வினையாளர் மிக்க விளைவறி யாரே.
  • 2. கருமங்கள் ஒன்று கருதும் கருமத்(து)
    உரிமையும் கன்மமும் உன்னும் பிறவிக்
    கருவினை யாவதும் கண்டகன்(று) அன்பிற்
    புரிவன கன்மக் கயத்துட் புகுத்துமே.
  • 3. மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்
    மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
    மாயை மறைய மறையவல் லார்கட்குக்
    காயமும் இல்லைக் கருத்தில்லை தானே.
  • 4. மோழை அடைத்து முழைதிறந் துள்புக்குக்
    கோழை அடைக்கின்ற(து) அண்ணற் குறிப்பினில்
    ஆழ அடைத்தங் கனலிற் புறஞ்செய்து
    தாழ அடைப்பது தன்வலி யாமே.
  • 5. ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
    ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிகிலார்
    ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிந்தபின்
    ஆசூசம் மானுடம் ஆசூசம் ஆமே.
  • 6. ஆசூசம் இல்லை அருநிய மத்தருக்(கு)
    ஆசூசம் இல்லை அரனைஅற் சிப்பவர்க்(கு)
    ஆசூசம் இல்லையாம் அங்கி வளர்ப்போருக்(கு)
    ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே.
  • 7. வழிபட்டு நின்று வணங்கு மவர்க்குச்
    சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்
    குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
    கழிபட் டவர்க்கன்றிக் காணஒண் ணாதே.
  • 8. தூய்மணி தூய்அனல் தூய ஒளிவிடும்
    தூய்மணி தூய்அனல் தூர்அறி வார்இல்லை
    தூய்மணி தூய்அனல் தூரறி வார்கட்குத்
    தூய்மணி தூய்அனல் தூயவும் ஆமே.
  • 9. தூயது வாளாக வைத்தது தூநெறி
    தூயது வாளாக நாதன் திருநாமம்
    தூயது வாளாக அட்டமா சித்தியாம்
    தூயது வாளாகத் தூய்அடிச் செல்லே.