
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 33. சுத்தா சுத்தம
பதிகங்கள்

வழிபட்டு நின்று வணங்கு மவர்க்குச்
சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்
குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
கழிபட் டவர்க்கன்றிக் காணஒண் ணாதே.
English Meaning:
When Purity Real BeginsFor them that in Yogic Way stand,
Purity in Cranium top begins;
They who are sunk in pit of lust
Will Purity`s goal reach not;
Only those who have sent Muladhara Fire
Up into Central Nadi of Sushumna
Will see Purity Real;
Others cannot.
Tamil Meaning:
முன்னர்ப் புறத்தொண்டுகளைச் செய்து, பின்பு அகத்தும், புறத்தும் சிவனை வழிபடுவார்க்குச் சுழித்தோடுகின்ற நீரில் மூழ்கினார்போலும் ஓர் உண்மைத் தூய்மை தொடங்குவதாகும். (பின்னர் அகத்தும், புறத்தும் அங்கி வளர்த்தலால் அத்தூய்மை முதிரும்.) இவைகளைச் செய்யாது புறத்தூய்மையை மட்டுமே வலியுறுத்திக் கூறு கின்ற நூல்களாகிய குழிகளில் வீழ்ந்தவர்கள் தூய்மையைப் பொருந்தார். இனி முற்கூறிய தூய்மையைப் பொருந்தியவர்களில்கூட, உருவம், அருவுருவம், அருவம் என்னும் குறிகளைக் கடந்து குறியிறந்து உணரும் உணர்வுடையார்க்கன்றிச் சிவனை நேர்படக் காணுதல் இயலாது.Special Remark:
`சிவனை நேர்படக்காணுதலே முழுத் தூய்மையாம்` என்றபடி கூடுதலுக்குச் செயப்படுபொருள் முன்னர்க் கூறிய தூய்மையேயாயிற்று. தொடங்குதல் கூறினமையால் முதிர்தலும் கொள்ளப்பட்டது.இதனால், அகத்தூய்மை தொடங்கி, முதிர்ந்து, முற்றுமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage