ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. அறிவறி வென்ற அறிவும் அனாதி
    அறிவுக் கறிவாம் பதியும் அனாதி
    அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
    அறிவு பதியின் பிறப்பறுந் தானே.
  • 10. அறிந்தணு மூன்றும்மெய் யாங்கணும் ஆகும்
    அறிந்தணு மூன்றும்மெய் யாங்கணும் ஆக
    அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்
    அறிந்த பதிபடைப் பான்அங் கவற்றையே.
  • 11. படைப்பாதி ஆவ பரசிவம் சித்தி
    இடைப்பால் உயிர்கட் கடைத்திவை வாங்கல்
    படைப்பாதி சூக்கத்தைத் தற்பரம் செய்யப்
    படைப்பதி தூலம்அப் பாசத்து ளாமே.
  • 12. ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்
    ஆகிய சத்தி சிவம்பரம் மேல்ஐந்தால்
    ஆகிய சூக்கத்தில் ஐங்கருமம் செய்வோன்
    ஆகிய தூலத்தீ சானனும் ஆமே.
  • 13. மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும்
    மேவும்ப ரின்விந்து ஐம்முகன் வேறீசன்
    மேவும் உருத்திரன் மால் வேதா மேதினி
    ஆகும் படிபடைப் போன்அரன் மே.
  • 14. படைப்பும் அளிப்பும் பயில்இலைப் பாற்றும்
    துடைப்பும் மறைப்பும்முன் தோன்றும் அருளும்
    சடத்தை விடுத்த அருளும் சகலத்(து)
    அடைத்த அனாதியை ஐந்தென லாமே.
  • 15. ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு
    வேறாகும் மாயையில் முப்பால் முகுத்திட்டங்(கு)
    ஈறாம் கருவி யிவற்றால் வகுத்திட்டு
    வேறாம்பதி பசு பாசம்வீ டாகுமே.
  • 16. வீட்கும் பதி பசு வைப்பாசம் மீதுற
    ஆட்கும் இருவினை ஆங்கவற் றால்உணத்
    தாட்கும் நரக சுவர்க்கத்தில் தான்இட்டு
    நாட்குற நான்றங்கு நற்பாசம் நண்ணுமே.
  • 17. நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம்
    பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
    கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
    அண்ண லடிசேர் உபாயம தாகுமே.
  • 18. ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று
    மோகம் அறச்சுத்தன் ஆதற்கு மூலமே
    ஆகும் அறுவை அழுக்கேற்றி எற்றல்போல்
    ஆகுவ எல்லாம் அருட்பாசம் ஆகுமே.
  • 19. பாசம் பயில்உயிர் தானே பரம்முதல்
    பாசம் பயில்உயிர் தானே பசுஎன்ப
    பாசம் பயிலப் பதிபரம் ஆதலால்
    பாசம் பயிலப் பதிபசு ஆகுமே.
  • 2. பசுப்பல கோடி பிரமன் முதலாப்
    பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
    பசுத்தன்மை நீங்கி அப் பாசம் அறுத்தால்
    பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.
  • 20. அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்
    அத்தத்தில் உத்தர மாகும் திருமேனி
    அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும்
    அத்தத்தில் தம்மை அடைந்திநின் றாரே.
  • 3. கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்றும்
    நடக்கின்ற ஞானத்தை நாள்தோறும் நோக்கித்
    தொடக்கொன்று மின்றித் தொழுமின் தொழுதால்
    குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.
  • 4. பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை
    நேசம்செய் தாங்கே நினைப்பர் நினைத்தலும்
    கூசம்செய் துன்னிக் குறிக்கொள்வ தெவ்வண்ணம்
    வாசஞ்ய் பாசத்துள் வைக்கின்ற வாறே.
  • 5. விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி
    விட்ட பசுபாசம் மெய்கண்டான் மேவுன்றான்
    கட்டிய கேவலம் காணும் சகலத்தைச்
    சுட்டு நனவில் அதீதத்தில் தோயுமே.
  • 6. நாடும் பதியுடன் நற்பசு பாசமும்
    நீடுமா நித்த நிலையறி வார்இல்லை
    நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்
    நாடிய சைவர்க்கு நந்தி யளித்ததே.
  • 7. ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
    ஆய பசுவும் அடல்ஏ றெனநிற்கும்
    ஆய பலிபீடம் ஆகும்நற் பாசம்ஆம்
    ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.
  • 8. பதிபசு பாசம் பயில்வியா நிற்கப்
    பதிபசு பாசம் பகர்வர்க்கா றாக்கிப்
    பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும்
    பதிபசு பாசம் பயில்நில் லாவே.
  • 9. பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
    கதியும் பசுபாச நீக்கமும் காட்டி
    மதிதந்த ஆனந்த மாநந்தி காணும்
    துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்திலே.