ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 19. சொரூப உதயம்

பதிகங்கள்

Photo

சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி
அரியன உற்பலம் ஆமாறு போல
மருவிய சத்தியாதி நான்கும் மதித்த
சொரூபக் குரவன் சுகோயத் தானே.

English Meaning:
Dawn of Svarupa Bliss in Satya-Jnana-Ananda

Manifestness, Form, Attributes and Past
—All absorbed,
Satya-Jnana-Ananda arises (Truth-Knowledge-Bliss)
With the six attributes blending; (flower, purity, beauty color, fragrance and radiance)
Like it, arises the Bliss of Holy Guru
Of self-illumined Manifestness,
In whom the Four Saktis absorbed are.
Tamil Meaning:
கவர்ச்சியான வடிவம், நிறம், மணம் முதலிய பிற பண்புகள் ஆகியவற்றை இயல்பாகவே கொண்டிருத்தலாலே குவளை மலர்கள் பிற மலர்களினும் கிடைத்தற்கரிய சிறந்த மலர்களாகக் கருதப்படுகின்றன. அதுபோலவே, `சத்தியம், ஞானம், அனந்தம், ஆனந்தம் என்னும் மெய்ப்பொருள் இயல்புகளைத் தனது ஞானமாக அடைந்த உண்மைக் குருவே வீட்டின்பத்தைத் தர வல்லவனாவான்.
Special Remark:
குவளை மலரையே எல்லா மலர்களினும் சிறந்த மலராக நாயனார் கூறிவருதலை மேலேயும் சில மந்திரங்களிற் கண்டோம். அதற்குக் காரணம், அது தீக்கைக் காலத்தில் அணியப் படுதல் பற்றிப்போலும்! ``சொரூபம்`` இரண்டில் முன்னது வடிவம். பின்னது உண்மை. உருவம் - நிறம். `தொன்மை` என்பதில் விகுதி தொகுக்கப்பட்டது. `தொல்லாக` என ஆக்கம் வருவிக்க. இயல்பை, ``தொன்மை`` என்றார். விழுங்குதல், கொண்டிருத்தல். ``விழுங்கி`` என்னும் எச்சம் காரணப் பொருளில் வந்தது. `உற்பலம் அரியன ஆமாறு போல` என மாற்றிக் கொள்க. சத்தியம் முதலிய நான்கு மெய்ப்பொருளின் இயல்பாதல் மேலேயும் கூறப்பட்டது.
இதனால், `சிவனைப் போல, `சொரூபம்` எனச் சொல்லத் தக்கவன் உண்மையான ஞான குருவே` என்பது கூறப்பட்டது.