ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 19. சொரூப உதயம்

பதிகங்கள்

Photo

அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள்
எங்குநின் றாரும் இறைவனென் றேத்துவர்
தங்கிநின் றான்தனி நாயகன் எம்மிறை
பொங்கிநின் றான்புவ னாபதி தானே.

English Meaning:
Parasiva is Immanent in All Gods

As thus He stood,
The Gods Brahma, Vishnu and others
Who wherever stood
Praise Him as Lord Supreme;
In them all He immanent stood, my peerless Lord,
And beyond them too, He stood,
He, the Lord of Worlds all.
Tamil Meaning:
அயன், மால் முதலிய தேவர்கள் முதலாக எங்குள் ளவர்களும் இறைவனை, `அவன் பரமாகாசத்தில் இருக்கின்றான், ஆயினும் ஏத்துவார்க்கு அருள்புரிகின்றான் என அவனைக் காணாமலே கருதிநின்று ஏத்துவார்கள். ஆயினும் எங்கட்கு அவன் குருஉருவாகி எதிர் வந்து எங்களோடு நீங்காது உறைகின்றான்.
Special Remark:
`அதனால் நாங்கள் அவனை நேரிற்கண்டு வலம் வந்து வணங்கி, ஆடிப்பாடி, அளவளாவி மகிழ்கின்றோம்` என்பது குறிப் பெச்சம். ``அங்கு நின்றான்`` என்பதனை, ``இறைவன்`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. `தேவர்கள் முதலாக` என ஒரு சொல் வருவிக்க. ``தனி நாயகன், புவனாபதி`` என்னும் பெயர்கள் இரண்டன் உருபு ஏற்று, ``ஏத்துவர்`` என்பதனோடு முடிதற்கு உரியன; செய்யுள் நோக்கி வேறுபட்டு நின்றன. ``எம் இறை`` என்றது, குருவாகி வந்து அருள் புரிந்த உரிமை பற்றி. பொங்குதல், கூர்தலாகிய உள்ளது சிறத்தலே யாகலின் அதனை இங்கு, ``பொங்கி`` என்றார். ``பொங்கி நின்றான்`` எனப் பண்பின் வினைப் பண்பின்மேல் ஏற்றப்பட்டது. கூர்ந்தது அருள். `அது கூர்ந்து, குருவுருவாய் வந்தது` என்பதாம். புவனங்களை ``புவனா`` என பெண்பாலற் கூறினார். அன்னதொரு வழக்குப் பற்றி,
இதனால், அருட் குருவின் சிறப்பு உணர்த்தப்பட்டது.