
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியை
பதிகங்கள்

நள்குகைநால் வட்டம் படுத்ததன் மேற்காகக்
கள்ளவிழ் தாமம் களபம்கத் தூரியும்
தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே.
English Meaning:
Ssmadhi RitualsShape the cave inside into a square,
Upon that lay garlands of honey-dew flowers;
Sandal, musk, civet, and unguents diverse;
And pouring rose water
Light the ritual lamp, in devotion ecstatic.
Tamil Meaning:
நடுவில் நில அறை இருக்க, நாற்புறத்திலும் மேலே வரம்பு அமைத்தபின், அதற்கு மேற்கு பக்கத்தில் நிலத்தின்மேல் ஆசனத் தின்மேல் திருமேனியை எழுந்தருளப் பண்ணி, சந்தனத்தின் கருப்பூரம் முதலியவை கலந்த குழம்பு, தனியாக இழைத்த சந்தனம், புனுகு, பனிநீர் முதலியவை களால் திருமுழுக்குச் செய்வித்து, தேன் துளிக்க மலரும் பூவால் ஆகிய மாலையைச் சார்த்தி, தூப தீபம் காட்டுக.Special Remark:
``அதன்மேற்காக`` என்றமையால், `நிலத்தின் மேல்` என்பது பெறப்பட்டது. வழிபாடுகளை மிகச் சுருங்கக் கூறினாராயிலும் உபலக்கணத்தால் இங்குக் கூறாதனவும் கொள்ளப்படும்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage