ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியை

பதிகங்கள்

Photo

அந்த மிலாஞானி தன் ஆகம் தீயினில்
வெந்திடில் நாடெலாம் வெந்திடும் தீயினில்
நொந்தது நாய்நரி நுங்கிடில் நுண்செரு
வந்துநாய்ந ரிக்குண வாம்வை யகமே.

English Meaning:
Do not Consign Siva Jnani`s Body to Fire; Nor Neglect it

If the body of Siva Jnani is to fire consigned,
The people entire will in burning fever suffer;
If his body a prey to dogs and jackals left,
Tumultuous war the land will see,
And the people a prey to dogs and jackals be.
Tamil Meaning:
இதன் பொருள் வெளிப்படை.
Special Remark:
அந்தம் இன்மை ஞானத்தைச் சிறப்பித்தது. வருகின்ற மந்திரத்தில் எண்ணின்மையும் அன்னது. நோதல் பசியினால். செரு - போர். செருச்செய்வாரது நுட்பமாகிய திறமை செருவின்மேல் ஏற்றப்பட்டது. ``வந்து`` என்றதனில் `வேற்று நாட்டிலிருந்து` என்பது பெறப்பட்டது. இவ்வெச்சம் காரணப்பொருட்டாய் நின்றது. தளை சிதைய ஓதப்படுவன பாடமல்ல.
இதனால் யோகியர் ஞானியரது உடலை எரியூட்டுதலும், வாளா விடுதலும் குற்றமாதல் கூறப்பட்டது. அடுத்து வரும் மந்திரமும் எரிப்படுத்தல் கூடாமையைக் கூறும்.