
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியை
பதிகங்கள்

அந்த மிலாஞானி தன் ஆகம் தீயினில்
வெந்திடில் நாடெலாம் வெந்திடும் தீயினில்
நொந்தது நாய்நரி நுங்கிடில் நுண்செரு
வந்துநாய்ந ரிக்குண வாம்வை யகமே.
English Meaning:
Do not Consign Siva Jnani`s Body to Fire; Nor Neglect itIf the body of Siva Jnani is to fire consigned,
The people entire will in burning fever suffer;
If his body a prey to dogs and jackals left,
Tumultuous war the land will see,
And the people a prey to dogs and jackals be.
Tamil Meaning:
இதன் பொருள் வெளிப்படை.Special Remark:
அந்தம் இன்மை ஞானத்தைச் சிறப்பித்தது. வருகின்ற மந்திரத்தில் எண்ணின்மையும் அன்னது. நோதல் பசியினால். செரு - போர். செருச்செய்வாரது நுட்பமாகிய திறமை செருவின்மேல் ஏற்றப்பட்டது. ``வந்து`` என்றதனில் `வேற்று நாட்டிலிருந்து` என்பது பெறப்பட்டது. இவ்வெச்சம் காரணப்பொருட்டாய் நின்றது. தளை சிதைய ஓதப்படுவன பாடமல்ல.இதனால் யோகியர் ஞானியரது உடலை எரியூட்டுதலும், வாளா விடுதலும் குற்றமாதல் கூறப்பட்டது. அடுத்து வரும் மந்திரமும் எரிப்படுத்தல் கூடாமையைக் கூறும்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage