
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை
பதிகங்கள்

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே.
English Meaning:
Sakti seeking, some religious sects ritual drinks consume,But Sakti dies when the o`er- powered senses swoon;
True Sakti, indeed, in Sivajnanam finds its birth,
To merge in Truth-Wisdom-Bliss—and to other things immune.
Tamil Meaning:
சத்தியின் அருளைப் பெறவேண்டிச் சத்தி மதத்தார் (வாம மதத்தவர்கள்) கள்ளுண்பார்கள். அதன் பயனாக அவர்கள் பெறுவது இயல்பாகத் தமக்கு அமைந்த சத்தியையும் (வலிமை யையும்) இழத்தலேயாம். (ஆகவே, அவர்தம் கொள்கை அறியாமை வழிப்பட்டது என்பது தெளிவு. அஃது எவ்வாறு எனில், கள்ளுண்ட பின் அவர் நினைவிழந்து வீழ்ந்து செயலற்றுக் கிடத்தலால்) உண்மையில் `சத்தி` என்பது சிவபெருமானது அறிவு வடிவாகிய ஆற்றலே; அச் சத்தியால் பெறும் பயன், அதன்வழி நின்று, நிலைபேறும், தெளிவும் உடைய சிவானந்தத்தைப் பெறுதலே.Special Remark:
``சத்தி`` நான்கில் முதலது ஆகுபெயர். `அச் சமயத்தார்` எனச் சுட்டு வருவிக்க. தன்னில் - அந்த ஞானத்தில். `சார்தலே பயன்` என ஒருசொல் வருவிக்க.இதனால், `சாத்தேயம்` எனப்படும் மதம் போலியாதல் கூறும் முகத்தால், அவர்தம் ஒழுக்கமாகிய கள்ளுண்டல் கடியப்படுவதாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage