ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
    இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்
    பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
    அழைக்கின்ற போதறி யாரவர் தாமே.
  • 10. அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
    வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
    செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
    தவ்விகொ டுமின் தலைப்பட்ட போதே.
  • 2. ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது
    ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்
    ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
    ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரே. 
  • 3. மத்தளி ஒன்றுளே தாளம் இரண்டுள
    அத்துள்ளே வாழும் அமைச்சும்அஞ் சுள்ளன
    அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
    மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே. 
  • 4. வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
    வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
    வேங்கடம் என்றே விரகறி யாதவர்
    தாங்கவல் லாருயிர் தாமறி யாரே.
  • 5. சென்றுணர் வான்திசை பத்துந் திவாகரன்
    அன்றுணர் வால்அளக் கின்ற தறிகிலர்
    நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
    பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே. 
  • 6. மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
    பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை
    கூறும் கருமயிர் வெண்மயி ராவதும்
    ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே. 
  • 7. துடுப்பிடைம் பானைக்கும் ஒன்றே அரிசி
    அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி
    அடுத்தெரி யாமற் கொடுமின் அரிசி
    விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.
  • 8. இன்புறு வண்டிங் கினமலர் மேற்போய்
    உண்பது வாச மதுபோல் உயிர்நிலை
    இன்புற நாடி யிளைக்கிலு மூன்றொளி
    கண்புறம் நின்ற கருத்துள்நில் லானே. 
  • 9. ஆம்விதி நாடின் அறஞ்செய்மின் அந்நிலம்
    போம்விதி நாடின் புனிதனைப் போற்றுமின்
    ஆம்விதி வேண்டும தென்சொலின் மானிடர்
    ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே.