ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை

பதிகங்கள்

Photo

இன்புறு வண்டிங் கினமலர் மேற்போய்
உண்பது வாச மதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி யிளைக்கிலு மூன்றொளி
கண்புறம் நின்ற கருத்துள்நில் லானே. 

English Meaning:
Lord is the Light Beyond Visible Reach
The bee, that nectar seeks, flies high for its flower on top
And there, alone, it sucks the fragrant juice;
Even so, they who seek the blessed grace divine,
Aspire for the Light beyond visible reach of eyes.
Tamil Meaning:
தேனை விரும்புகின்ற வண்டு அதனை உண்பது மலரிடத்தே சென்று அதன்கண் வீழ்ந்தேயாம். உயிரினுடைய நிலைமையும் அத்தன்மையதே. அஃதாவது, இன்பத்தை விரும்புகின்ற உயிர் அதனைப் பெறுவது சிவனை அடைந்து அவனிடத்து அடங்கி நிற்கும் பொழுதேயாம். வண்டு தேனை உண்ண விரும்பிப் பிற இடங்களில் ஓடியிளைப்பினும் அது கிடையாததுபோல, உயிரும் இன்பம் பெற விரும்பிப் புறக்கண்வழி ஓடி இளைப்பினும் அங்ஙனம் ஓடுகின்ற உயிரில், அன்பின்ஊன்ற உள்ளெழும் சோதியாகிய (தி.12 பெ. பு. திருஞான - 835) சிவன் விளங்கமாட்டான். `எனவே, இன்பம் கிட்டாது` என்பதாம்.
Special Remark:
இங்ஙனமாகவே அகக்கண்ணில் நின்ற உயிர் உணர் விற்கு விளங்குவானாயிற்று. இனமலர் - கூட்டமாய மலர். இஃது ஒரு மைக்குப் பன்மை உவமை. வாசம் - வசித்தல்; `வாசத்தால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. \\\\\\\"போல்`` என்னும் முதனிலை முற்றுப் பொருளது. பொருட்கண். ``இன்புற நாடி நினைக்கிலும் - கண்புறம் நின்ற கருத்துள் நில்லானே`` எனப் பின்னுங்கூறி விரித்தமையால், உவமைக்கண்ணும் அவ்வாறு விரித்துரைக்கப்பட்டது. நினைக்கினும் என்பது பாடம் அன்று. `கட்புறம்` என்பது, எதுகை நோக்கி மெலிந்து நின்றது. இது, `புறக்கண்` என்பதன் நிலைமாற்றம்.
இதனால், உணர்வு நிலையாமை, அதன் மறுதலை முகத்தால் கூறப்பட்டது. கண், ஞானமுமாம்.