ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
    விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
    குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
    விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே.
  • 10. எய்திய நாளில் இளமை கழியாமை
    எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
    எய்திய நாளில் எறிவ தறியாமல்
    எய்திய நாளில் இருந்துகண் டேனே. 
  • 2. ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
    பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை
    நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினுந்
    தூண்டு விளக்கின் சுடரறி யாரே. 
  • 3. தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
    ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
    பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
    ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே. 
  • 4. விரும்புவர் முன்னென்னை மெல்லியல் மாதர்
    கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
    அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்
    கரும்பொத்துக் காஞ்சிரங் காயும்ஒத் தேனே. 
  • 5. பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
    காலங் கழிவன கண்டும் அறிகிலார்
    ஞாலங் கடந்தண்டம் ஊடறுத் தானடி
    மேலுங் கிடந்து விரும்புவன் நானே. 
  • 6. காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
    மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
    சாலும்அவ் வீசன் சலவிய னாகிலும்
    ஏல நினைப்பவர்க் கின்பஞ்செய் தானே. 
  • 7. பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
    பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
    பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
    பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே.
  • 8. கண்ணனுங் காய்கதி ரோனும் உலகினை
    உண்ணின் றளக்கின்ற தொன்றும் அறிகிலார்
    விண்ணுறுவா ரையும் வினையுறு வாரையும்
    எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே. 
  • 9. ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
    நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
    கன்றிய காலன் கருங்குழி வைத்தபின்
    சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.