ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. குறிப்பறிந் தேன்உடலோடுயிர் கூடிச்
    செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
    மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்
    கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே. 
  • 10. கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்
    துடலுடை யான்பல ஊழிதொ றூழி
    அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்
    இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே. 
  • 2. கற்றறி வாளர் கருதிய காலத்துக்
    கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
    கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்
    கற்றறி காட்டக் கயலுள வாக்குமே.
  • 3. நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
    கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
    சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
    மற்றொன் றிலாத மணிவிளக் காமே. 
  • 4. கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
    பல்லி யுடையார் பரம்பரிந் துண்கின்றார்
    எல்லியுங் காலையும் ஏத்தும் இறைவனை
    வல்லியுள் வாதித்த காயமு மாமே. 
  • 5. துணையது வாய்வருந் தூயநற் சோதி
    துணையது வாய்வருந் தூயநற் சொல்லாம்
    துணையது வாய்வருந் தூயநற் கந்தம்
    துணையது வாய்வருந் தூயநற் கல்வியே. 
  • 6. நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
    பாலொன்று பற்றினாற் பண்பின் பயன்கெடும்
    கோலொன்று பற்றினாற் கூடா பறவைகள்
    மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே.
  • 7. ஆய்ந்துகொள் வார்க்கரன் அங்கே வெளிப்படும்
    தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
    ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
    வாய்ந்த மனமல்கு நூல்ஏணி யாமே
  • 8. வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
    கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
    ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
    வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே. 
  • 9. பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்
    முற்றது எல்லாம் முதல்வன் அருள்பெறில்
    கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
    கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே.