
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 23. கல்வி
பதிகங்கள்

துணையது வாய்வருந் தூயநற் சோதி
துணையது வாய்வருந் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வருந் தூயநற் கந்தம்
துணையது வாய்வருந் தூயநற் கல்வியே.
English Meaning:
As our Guardian Angle comes the pure Light from highAs our Guardian Angel, the Pure word in beauty drest,
As our Guardian Angel comes the Pure Fragrance rich,
As our Guardian Angel comes the Pure Knowledge best.
Tamil Meaning:
உயிர்கட்குச் செல்கதிக்குத் துணையாய் வருகின்ற இறைவன், என்றும் உறுதுணையாகப் பற்றுமாறு நல்லாசிரியரால் அறிவுறுத்தப்படுகின்ற தூய நல்ல உறுதிச் சொல்லே (உபதேச மொழியே)யாய் நிற்பன். அச்சொல்லும் மலரோடு ஒட்டியே வருகின்ற மணம்போலத் தூயநல்ல கல்வியோடு ஒட்டியே வருவதாம்.Special Remark:
`ஆதலின் அதனைக் கற்க` என்பது குறிப்பெச்சம். `கந்தம்போல்` என உவம உருபு விரிக்க. ஒடுவின் பொருளில் வந்த ஏழாவது இறுதிக்கண் தொக்கது.இதனால், உண்மைக் கல்வி ஆசிரியர் உறுதி மொழியைத் தெளிவிக்கும் முகத்தால் இறைவனை அடைவித்தல் கூறப்பட்டது
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage