ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
    உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
    கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
    மகிழ்ந்தன்பு செய்யும் மருளது வாமே. 
  • 10. விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
    தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
    எட்டும்என் னாருயி ராய்நின்ற ஈசனை
    மட்டுக் கலப்பது மஞ்சன மாமே. 
  • 2. இன்பம் பிறவிக் கியல்வது செய்தவன்
    துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
    அன்பிற் கலவிசெய் தாதிப் பிரான்வைத்த
    முன்பிப் பிறவி முடிவது தானே. 
  • 3. அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
    இன்புறு கண்ணியொ டேற்க இசைந்தனன்
    துன்புறு கண்ணிஐந் தாடுந் தொடக்கற்று
    நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.
  • 4. புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
    உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்
    குணர்ச்சியில் லாது குலாவி உலாவி
    அணைத்தலும் இன்பமதுஇது வாமே. 
  • 5. உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
    சித்தர்கள் என்றுந் தெரிந்தறி வார்இல்லை
    பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
    முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.
  • 6. கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
    கண்டேன் கரியுரி யான்றன் கழலிணை
    கண்டேன் கமல மலர்உறை வானடி
    கண்டேன் கழலதென் அன்பினுள் யானே. 
  • 7. நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்
    றும்பரில் வானவர் ஓதுந் தலைவனை
    இன்பனை இன்பத் திடைநின் றிரதிக்கும்
    அன்பனை யாரும் அறியகி லாரே. 
  • 8. முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
    அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
    இன்பப் பிறப்பும் இறப்பும் இலார்நந்தி
    யன்பில் அவனை அறியகி லாரே.
  • 9. ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்
    பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
    தேசுற் றறிந்து செயலற் றிருந்திட
    ஈசன்வந் தெம்மிடை ஈட்டிநின் றானே.