ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. கல்லா அரசனுங் காலனும் நேரொப்பர்
    கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
    கல்லா அரசன் அறம்ஓரான் கொல்லென்பான்
    நல்லாரைக் காலன் நணுகிநில் லானே.
  • 10. தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை
    அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
    எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே
    மெய்த்தண்டஞ் செய்வதவ் வேந்தன் கடனே.
  • 2. நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
    நாடோறும் நாடி அரன்நெறி நாடானேல்
    நாடோறும் நாடு கெடும் மூட நண்ணுமால்
    நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே.
  • 3. வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
    வேட நெறிநிற்போர் வேடம்மெய் வேடமே
    வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
    வேட நெறிசெய்தால் வீடது வாகுமே. 
  • 4. மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
    வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
    பீடொன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்
    தாடம் பரநூற் சிகையறுத் தால்நன்றே. 
  • 5. ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
    ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை
    ஞானிக ளாலே நரபதி சோதித்து
    ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.
  • 6. ஆவையும் பாவையும் மற்றற வோரையுந்
    தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையும்
    காவலன் காப்பவன் காவா தொழிவனேல்
    மேவும் மறுமைக்கு மீளா நரகமே. 
  • 7. திறந்தரு முத்தியுஞ் செல்வமும் வேண்டின்
    மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும்
    சிறந்தநீர் ஞாலஞ் செய்தொழில் யாவும்
    அறைந்திடில் வேந்தனுக் காறிலொன் றாமே.
  • 8. வேந்தன் உலகை மிகநன்று காப்பது
    வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்
    பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தான்கொள்ளின்
    பாய்ந்த புலியன்ன பாவகத் தானே. 
  • 9. கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
    பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
    மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
    மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.