ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
    திசையுந் திசைபெறு தேவர் குழாமும்
    விசையம் பெருகிய வேதம் முதலாம்
    அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.
  • 10. அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணந்
    தங்கி இருக்கும் தகையருள்செய்தவர்
    எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
    பொங்கி நிறுத்தும் புகழது வாமே. 
  • 2. ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
    போகதி நாடிப் புறங்கொடுத் துண்ணுவர்
    தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
    தாமறி வாலே தலைப்பட்ட வாறே.
  • 3. அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
    அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான
    இணைதுணை யாமத் தியங்கும் பொழுது
    துணையணை யாயதோர் தூய்நெறி யாமே. 
  • 4. போதிரண் டோதிப் புரிந்தருள் செய்திட்டு
    மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்கும்
    தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
    வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே. 
  • 5. நெய்நின் றெரியும் நெடுஞ்சுட ரேசென்று
    மைநின் றெரியும் வகையறி வார்கட்கு
    மைநின் றவிழ்தரு மந்திர மும்என்றும்
    செய்நின்ற செல்வமும் தீயது வாமே. 
  • 6. பாழி அகலுள் எரியும் திரிபோலிட்
    டூழி அகலும் உறுவினை நோய்பல
    வாழிசெய் தங்கி உதிக்க அவைவிழும்
    வீழிசெய் தங்கி வினைசுடு மாமே. 
  • 7. பெருஞ்செல்வங் கேடென்று முன்னே படைத்த
    தருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
    வருஞ்செல்வத் தின்பம் வரவிருந் தெண்ணி
    அருஞ்செல்வத் தாகுதி வேட்கநின் றீரே. 
  • 8. ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
    ஒண்சுட ராகி என்னுள்ளத் திருக்கின்ற
    கண்சுட ரோன்உல கேழுங் கடந்தஅத்
    தண்சுடர் ஓமத் தலைவனு மாமே.
  • 9. ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை
    ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
    வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
    கோமத் துளங்கிக் குரைகடல் தானே.