ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
    ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவது
    நன்றுகண் டீர்இனி நமச்சிவா யப்பழம்
    தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.
  • 10. பிரான் வைத்தஐந்தின் பெருமை உணராது
    இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர்
    பராமுற்றும் கீழொடு பல்வகை யாலும்
    அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே.
  • 2. அகாரம் முதலாக ஐம்பத்தொன் றாகி
    உகாரம் முதலாக ஓங்கி உதித்து
    மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந் தேறி
    நகார முதலாகும் நந்திதன் நாமமே.
  • 3. அகாராதி யீரெட் டலர்ந்த பரையாம்
    உகராதி சத்தி உள்ளொளி ஈசன்
    சிகாராதி தான்சிவம் ஏதமே கோணம்
    நகாராதி தான்மூல மந்திரம் நண்ணுமே.
  • 4. வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி
    ஆய இலிங்கம் அவற்றின்மே லேஅவ்வாய்த்
    தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல்
    ஆயதீ ரும்ஐந்தோ டாம்எழுத் தஞ்சுமே.
  • 5. கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக்
    கரணங்கள் விட்டுயிர் தான்எழும் போதும்
    மரணங்கை வந்துயிர் மாற்றிடும் போதும்
    அரணங்கை கூட்டுவ தஞ்செழுத்தாமே.
  • 6. ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
    ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர்
    சேயுறு கண்ணி திருவெழுத் தஞ்சையும்
    வாயுற ஓதி வழுத்தலும் ஆமே.
  • 7. குருவழி யாய குணங்களில் நின்று
    கருவழி யாய கணக்கை அறுக்க
    வருவழி மாள மறுக்கவல் லார்கட்
    கருள்வழி காட்டுவ தஞ்செழுத் தாமே.
  • 8. வெறிக்க வினைத்துயர் வந்திடும் போது
    செறிக்கின்ற நந்தி திருவெழுத் தோதும்
    குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும்
    குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே.
  • 9. நெஞ்சு நினைந்து தம் வாயாற் பிரான்என்று
    துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று
    மஞ்சு தவழும் வடவரை மீதுறை
    அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே.