ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம்

பதிகங்கள்

Photo

வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி
ஆய இலிங்கம் அவற்றின்மே லேஅவ்வாய்த்
தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல்
ஆயதீ ரும்ஐந்தோ டாம்எழுத் தஞ்சுமே.

English Meaning:
How Aum and the Five Letters are Distributed in the Six Centres

In the six Adharas (centres) within
Are distributed the Five Letters and Aum;
That comprise Aum Nama Sivaya
In the Muladhara is Na
In the Svadhishtana is Ma
In the Navel Centre is Si
In the Heart Centre is Va
In the Throat Centre is Ya
In the Eye-brow Centre is Aum.
Tamil Meaning:
நந்தி நாமமாகிய நகாராதி ஐந்தெழுத்தாலாகிய மந்திரத்தின் நிலையை நுணுகி நுணுகி நோக்கினால், அடி அண்ணம், கண்டம், (மிடறு, இருதயம், உந்தி, மூலம் என்பவற்றில் முறையாகப் போய், முதல் நிலையாய் நிற்கும். அந்நிலையே `நாதம்` என்பர். அதனை `அகரம்` எனவும் வழங்குவர். இனி அது தியானிக்கப்படும் நிலையில் புருவநடு, நெற்றி, உச்சி அதற்கு மேலும் செல்வனவாகிய நிராதாரம், மீதானம் ஈறாகிய ஐந்திடத்திலும் பொருந்தும்.
Special Remark:
எல்லாச் சொற்களுமே ஒருவன் தன் செவிக்கும் பிறர் செவிக்கும் கேட்கும்படி சொல்லும்பொழுது பல், இதழ், நா, அண்ணம் முதலியவற்றின் முயற்சியால் பிராண வாயுவோடு கூடிப் பருமையாய் வெளிப்பட்டு வைகரி வாக்காய் நிகழும். இவ்வாறாக மந்திரங்களை உச்சரித்தல் `வாசகம்` எனப்படும். தன் செவிக்குக்கூடக் கேட்காதபடி மெல்ல உச்சரிக்கும் பொழுது `அடி, அண்ணம், கண்டம்` என்னும் இடங்களில் மத்திமை வாக்காய் நிகழும். இவ்வாறாக மந்திரங்களை உச்சரித்தல் `உபாஞ்சு` எனப்படும். இவ்வாறு உச்சரித்தலே இல்லாமல் பொருள்கள் கருத்தளவாய் நிற்கும்பொழுது இருதயத்திலும், கருத்தளவாய் உருவாக நிற்கும்பொழுது உந்தியிலும் பைசந்தி வாக்காய் நிற்கும். கருத்தளவாய் நிற்க மந்திரங்களை எண்ணுதல் `மானதம் எனப்படும். இவற்றிலும் நுண்ணிதாய்க் காரண நிலையில் நிற்கும் பொழுது மூலாதாரத்தில் சூக்குமை வாக்காய் நிற்கும். அந்நிலையே சிறப்பாக, `குண்டலி சத்தி` எனப்படுகின்றது. இந்நிலைதான் ஐந்தெழுத்து மந்திரத்திற்கும் உள்ளது. ஆயினும், புருவ நடுமுதல் மீதானம் ஈறாகத் தியானப் பொருளாய் வியாபித்து நிற்றல் ஐந்தெழுத்து மந்திரத்திற்கன்றிப் பிற சொற்களுக்கில்லை. இச்சிறப்பை விளக்குதற் பொருட்டே முதற்கண் அனைத்துச் சொற்களும் நால்வகை வாக்காய் நிகழுமாற்றை எடுத்துக் கூறினார். ஆகவே அது ஞாபக மாத்திரையேயாம். புருவ நடு முதலாக மேற்செல்லுதல் எல்லாம் தியானமே யாதலின் அதனைக் கூறிற்றிலர். இலிங்கம், அதனை அடுத்துள்ள மூலத்தைக் குறித்தது. `அவ்வாய்` ஆம், என முடிக்க. துண்டம் - மூக்கு. அஃது அதன் அடியாகிய புருவ நடுவைக் குறித்தது. மத்தகம் - தலை நெற்றியையும் சுட்டுதற்கு, ``இருமத்தகம்`` என்றார். செல்லல் - அதற்குமேற் பெயராய்ச் செல்லும் இடங்களைக் குறித்தது.
இதனால், ஐந்தெழுத்து மந்திரம் பிற சொற்களின் வேறுபட்டதாதல் விளக்கப்பட்டது.